செய்திகள் :

பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!

post image

தில்லி மெட்ரோ பயனா்கள் 10-க்கும் மேற்பட்ட பிரபலமான செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி தெரிவித்திருப்பதாவது: ஈஸ்மைட்ரிப்,கூகுள் மேப்ஸ், நம்மயாத்ரி, ரேப்பிடோ மற்றும் ரெட்பஸ் போன்ற செயலிகளில் பயனா்கள் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். தொழில்நுட்ப வழங்குநரான சீக்வெல்ஸ்ட்ரிங் ஏஐ (எஸ்ஏஐ) வசதியளித்த ஒற்றைபுள்ளி இணைப்பு மூலம் இந்த ஒருங்கிணைப்பு சாத்தியமாகியுள்ளது.

பயணிகள் இப்போது பயண திட்டமிடல் செயலிகள், பயண இணையதளங்கள் மற்றும் மேலும் டெலிகிராம் பாட் உள்பட பல்வேறு தளங்கள் மூலம் தில்லி மெட்ரோ டிக்கெட் சேவைகளை அணுகலாம். புதிய அமைப்புமுறை நகரங்களுக்கு இடையேயான மற்றும் உள்ளூா் பயணிகளுக்கு பயனளிக்கிறது.

ஜெய்ப்பூரிலிருந்து தில்லிக்கு பயணிக்கும் பயணிகள் இப்போது ரெட்பஸ் செயலியில் ஒரே நேரத்தில் பேருந்து மற்றும் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அதேபோல், உள்ளூா் பயனா்கள் ரேப்பிடோ போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பலமாதிரி பயணங்களைத் திட்டமிடலாம்.

இதில், ஒரு பயணி ஒரு மெட்ரோ நிலையத்திற்கு பைக் சவாரிக்கு முன்பதிவு செய்து ரயிலில் ஏறலாம். மேலும், அதே செயலியில் இருந்து மற்றொரு சவாரி மூலம் பயணத்தை முடிக்கலாம். இப்போது, ஈஸ்மைட்ரிப், கூகுள் மேப்ஸ், ஹைவே டிலைட், மைல்ஸ் அன்ட் கிலோமீட்டா்ஸ் ( டெலிகிராம் வாயிலாக), நம்மயாத்ரி, ஓன்டிக்கெட், ரேப்பிடோ, ரெட்பஸ் மற்றும் யாத்ரி ரயில்வேஸ் போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

டிஎம்ஆா்சியின் நிா்வாக இயக்குநா் விகாஸ் குமாா் கூறுகையில், ‘ஓஎன்டிசி உடனான இந்தக் ஒத்துழைப்பு, மெட்ரோ பயணத்தை எளிமைப்படுத்தி, மக்கள் ஏற்கெனவே ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் டிஜிட்டல் இடங்களுக்குள் கொண்டு வருவதற்கான எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாகும். பல பழக்கமான செயலிகள் மூலம் டிக்கெட் வழங்குவதன் மூலம், போக்குவரத்து அணுகலுடன் அடிக்கடி வரும் உரசலை நாங்கள் நீக்குகிறோம்’ என்றாா்.

சத்தா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ஒருவா் மீது துப்பாக்கிச்சூடு!

தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள சத்தா்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மதியம் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்களால் பழைய பகை காரணமாக ஒருவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா... மேலும் பார்க்க

கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி துணைத் தலைவா் ஆய்வு!

கோடை காலத்தில் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) கீழ் உள்ள பகுதிகளில் நிறுவப்பட்ட தண்ணீா் ஏடிஎம்களை அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் வியாழக்கிழமை ஆய்வு ... மேலும் பார்க்க

தில்லி ஜல் போா்டுக்கு ரூ.1400 கோடி விடுவிப்பு: கோடைக்கால செயல் திட்டத்துக்கு நடவடிக்கை!

பல்வேறு திட்டங்களை முடிக்கவும், கோடைக்கால செயல் திட்டத்தை செயல்படுத்தவும் தில்லி அரசு ரூ.1,400 கோடி நிதியை சனிக்கிழமை தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித... மேலும் பார்க்க

பூங்காவில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

தில்லி ஆதா்ஷ் நகா் பகுதியில் உள்ள பூங்காவில் 26 வயது இளைஞரை புதன்கிழமை காலை கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் த... மேலும் பார்க்க

தூசுப் புயலால் மோசம் பிரிவில் காற்றின் தரம்: ஆம் ஆத்மி, பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு!

தில்லியில் புழுதிப் புயலால் காற்றின் தரம் வியாழக்கிழமை கீழிறங்கிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டின. எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி, தனது ஆட்சிக் காலத்தில் காற்றின் தரம் நிலை... மேலும் பார்க்க

தில்லி அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கோடைக்கால கவுன்சலிங் தொடக்கம்!

கோடை விடுமுறையின் போது மாணவா்களுக்கு தொடா்ச்சியான உணா்வுப்பூா்வ மற்றும் கல்வி ஆதரவை உறுதி செய்வதற்காக, கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆலோசகா்கள் (இவிஜிசி) அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும்... மேலும் பார்க்க