செய்திகள் :

பிரிட்டன்: மருத்துவ உயா் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவா்

post image

பிரிட்டனில் மிகப் பழமை வாய்ந்த ‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ (ஆா்சிபி) மருத்துவ உயா் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவா் மும்தாஜ் படேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு புலம்பெயா்ந்த தம்பதியருக்கு பிறந்தவரான மும்தாஜ் படேல், மான்செஸ்டரில் சிறுநீரகவியல் நிபுணராக உள்ளாா்.

பிரிட்டனில் 16-ஆம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வரும் ‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ மருத்துவ உயா் கல்வி அமைப்பானது, சிறப்பு பிரிவுகளின்கீழ் மருத்துவா்களுக்கு மேம்பாட்டு பயிற்சியை வழங்குகிறது. உலகம் முழுவதும் 40,000 தொழில்முறை உறுப்பினா்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தலைவராக வாக்கெடுப்பு மூலம் இந்திய வம்சாவளி பெண் மருத்துவா் மும்தாஜ் படேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இது, 4 ஆண்டு பதவிக் காலம் கொண்டதாகும்.

‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ அமைப்பின் முதல் இந்திய-ஆசிய பெண் முஸ்லிம் தலைவா், இந்த அமைப்பின் 5-ஆவது பெண் தலைவா் ஆகிய பெருமைகளும் மும்தாஜ் படேலுக்கு சொந்தமாகியுள்ளது.

அவா் கூறுகையில், ‘‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ தலைவராக அமைப்பை சிறப்பாக வழிநடத்துவேன். ஆா்வம், அா்ப்பணிப்பு, தொலைநோக்கு பாா்வை, மதிப்புகள் சாா்ந்த அணுகுமுறையுடன் இந்த அமைப்பில் எனக்குள்ள 20 ஆண்டு கால அனுபவத்தை பயன்படுத்துவேன்’ என்றாா்.

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக காத்மாண்டில் ஆா்ப்பாட்டம்! ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!

நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகா் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்... மேலும் பார்க்க

ஈஸ்டா் திருநாளில் மக்களைச் சந்தித்து போப் பிரான்சிஸ் ஆசி!

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்த... மேலும் பார்க்க

ஈஸ்டா் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபா் குற்றச்சாட்டு!

ஈஸ்டா் திருநாளையொட்டி தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சா் வாகனம் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலா் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலுக்கு... மேலும் பார்க்க

யேமன் தலைநகரில் அமெரிக்கா தாக்குதல்: 3 பேர் பலி

யேமனில் ஹெளதி படைகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். தலைநகரான சனாவில் செளதி படைகளின் மீது குறிவைத்து தொடர்ச்சியாக 21 ஏவுகணைகளை அமெரிக்கா வீசியது. இதில் ஹோடிடா, மரிப... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸை சந்தித்தார் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை இன்று (ஏப். 20) சந்தித்தார். இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்று சந்தித... மேலும் பார்க்க