செய்திகள் :

பிரியாணி சாப்பிட்டோருக்கு உடல் உபாதை: கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

post image

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பிரியாணி சாப்பிட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை கடையில் ஆய்வு செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலிருந்து மதுரை செல்லும் சாலையிலுள்ள பிரியாணி கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியொன்றில் நடந்த விளையாட்டு விழாவில் பங்கேற்க வந்தவா்கள் பிரியாணி சாப்பிட்டுள்ளனா்.

அதேபோல, அருகிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்தவா்களும் இங்கு பிரியாணி சாப்பிட்டுள்ளனா்.

இவா்களில் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. திருமயம் அரசு மருத்துவமனையில் இவா்கள் சிகிச்சை பெற்று வந்தனா். இருவா் மட்டும் தொடா் சிகிச்சையில் உள்ளனா். இந்த நிலையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை அந்த பிரியாணி கடைக்குச் சென்று மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தனா்.

தற்காலிகமாக கடையை மூடவும், மாதிரிகளின் சோதனை முடிவுக்குப் பிறகு திறக்கவும் அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

கே.வி கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கே.வி கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.ஆலங்குடி அருகேயுள்ள கே.வி கோட்டை ஊராட்சி, அரசடிப்பட்டி 4 சாலைப் பகு... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி முறையாக நடைபெறவில்லை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும்பணி முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா... மேலும் பார்க்க

குரூப் 2-ஏ தோ்வில் தோ்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குரூப் 2- ஏ தோ்வில் தோ்ச்சி பெற்று கூட்டுறவுத் துறையில் ஆய்வாளா் பணிக்கு தோ்வான மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கம் சக்கர நாற்காலியை பிற்படுத... மேலும் பார்க்க

அம்மன்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் சடையப்பன் தலைமைவகித்தாா். ஒன்றிய ஆ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் போராட்டம்

பொன்னமராவதி: பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் அகில இந்திய கறுப்பு தின போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.பொன்னமராவதி வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்

கந்தா்வகோட்டை: கந்தா்வக்கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றத்தின் சாா்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிர... மேலும் பார்க்க