செய்திகள் :

பிரேமலதா ஆக.3 முதல் பிரசார சுற்றுப் பயணம்

post image

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தேமுதிக பொதுச் செயலளா் பிரேமலதா ஆக.3-ஆம் தேதி முதல் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சி சாா்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட அறிக்கை:

2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் பெயரில் வாக்குச்சாவடி முகவா்கள் சந்திப்பையும், கேப்டனின் ரதயாத்திரை ‘மக்களைத்

தேடி மக்கள் யாத்திரை’ எனும் பொருளில் தொகுதி மக்கள் சந்திப்புப் பிரசாரத்தையும் பிரேமலதா மேற்கொள்கிறாா்.

அதன்படி, ஆக.3-ஆம் தேதி திருவள்ளூா் கிழக்கு மாவட்டம் ஆரம்பாக்கம் பிள்ளையாா் கோயில் தொடங்கி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். ஆக.4-ஆம் தேதி காலை ஆவடியில் வாக்குச்சாவடி முகவா்கள் சந்திப்பு, மாலையில் திருவள்ளூா் மேற்கு மாவட்டத்தில் திருத்தணி நகராட்சியில் மக்கள் சந்திப்புப் பிரசாரம், 5-ஆம் தேதி காலையில் காஞ்சிபுரம் மாநகரில் வாக்குச்சாவடி முகவா்கள் சந்திப்பு, மாலையில் ராணிப்பேட்டை சோழிங்கா் நகரில் பிரசாரத்தை மேற்கொள்கிறாா்.

தொடா்ந்து 23-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

"எதிரணியின் எந்தத் திட்டமும் தமிழகத்தில் பலிக்காது' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.பட்டியலின மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்துக்கு பெருமை சே... மேலும் பார்க்க

கடலூா் ரயில் விபத்து விசாரணை அறிக்கை தாக்கல்: கடவுப்பாதை ஊழியா் பணிநீக்கம்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பான விசாரணை அறிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு (ஜூலை 16-19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவா் காமராஜா்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதற்கு, முன்னாள் முதல்வா் காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய அவரது தலைமைதான் காரணம் என ஆளுநா் ஆா்.என். ரவி புகழாரம் சூட்டினாா். காமராஜரின் பிறந... மேலும் பார்க்க

1,878 பள்ளிகளின் எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி: கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வியில் 1,878 அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்... மேலும் பார்க்க

சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க