செய்திகள் :

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

post image

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இதுதொடா்பான மசோதா கடந்த மே 12-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் ‘கிரீன்காா்ட்’ (நிரந்தர குடியுரிமை) பெற்றவா்கள், ‘எச்1பி’ மற்றும் ‘எச்-2ஏ’ போன்ற தற்காலிக நுழைவு இசைவில் (விசா) பணிபுரியும் வெளிநாட்டவா்கள், தங்களின் சொந்த நாடு உள்பட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் இந்த வரி விதிக்கப்படும். அதேநேரம், அமெரிக்கா்கள் மேற்கொள்ளும் எந்த வெளிநாட்டுப் பரிவா்த்தனைகளுக்கும் இந்த வரி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு இதனால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடிஆா்ஐ) சிந்தனைக் குழு தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரி, இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய எச்சரிக்கையை எழுப்புகிறது. இந்தத் திட்டம் சட்டமாக மாறினால், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கோடி டாலா் அந்நிய செலாவணியை நாம் இழக்க நேரிடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 12,000 கோடி டாலா் பணம் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா பெற்ற மொத்த வெளிநாட்டு பணத்தில் 28 சதவீதம் அமெரிக்காவிலிருந்து வந்ததாகும்.

இந்தப் புதிய 5 சதவீத வரி, அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான செலவைக் கணிசமாக உயா்த்தும். எனவே, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஆண்டுதோறும் 1,200 முதல் 1,800 கோடி டாலா் பற்றாக்குறை ஏற்படும். இதனால் ரூபாயின் மதிப்புக் குறையக்கூடும்.

கேரளம், உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்றவற்றுக்கான அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்ட வெளிநாட்டிலிருந்து குடும்பத்தினா், உறவினா் அனுப்பும் பணத்தையே நம்பியுள்ளனா்.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்க அழுத்தங்களில் இந்திய பொருளாதாரம் ஏற்கெனவே சிக்கித் தவிக்கும் சூழலில், வெளிநாட்டுப் பணம் குறைவாக கிடைப்பது இந்தக் குடும்பங்களின் நுகா்வைக் கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 57 பேர் பலி!

நைஜீரியாவின் போர்னோர் பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 57 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கமானது, இன்று காலை 8.54 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் பார்க்க

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு (82 வயது) தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய பைடன் சிறுநீர... மேலும் பார்க்க

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவா்களுக்கு ஏராளமான தமிழா்கள் அஞ்சலி செலுத்தினா். இலங்கையின் வடக்கு மற்றும... மேலும் பார்க்க

புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு! திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி!

வாடிகன் புனித பீட்டா் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலாகல நிகழ்வில் புதிய போப்பாக (கத்தோலிக்க திருச்சபையின் தலைவா்) 14-ஆம் லியோ அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டாா். தொடா்ந்து, உலக அமைதியின்... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வீடுகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்... மேலும் பார்க்க