செய்திகள் :

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கடந்த 4 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம் என்ன?

post image

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம்

2021:

தேர்வெழுதிய மாணவர்கள்: 8,16,473

தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 8,16,473

தேர்ச்சி விகிதம்: 100%

2022

தேர்வெழுதிய மாணவர்கள்: 8,06,277

தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,55,988

தேர்ச்சி விகிதம்: 93.76%

2023

தேர்வெழுதிய மாணவர்கள்: 8,03,385

தேர்ச்சிபெற்ற மாணவர்கள்: 7,55,451

தேர்ச்சி விகிதம் : 94.03%

2024

தேர்வெழுதிய மாணவர்கள்: 7,60,606

தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,19,196

தேர்ச்சி விகிதம்: 94.56%

2025

தேர்வெழுதிய மாணவர்கள்: 7,92,494

தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,53,142

தேர்ச்சி விகிதம்: 95.03%

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.70%

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை

கடந்த ஆண்டு - 2,478

இந்த ஆண்டு - 2,638

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை

கடந்த ஆண்டு - 397

இந்த ஆண்டு - 436

தனித்தேர்வர்கள் தேர்ச்சி விவரம்

பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,019 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7,466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோன்று தேர்வு எழுதிய 140 சிறைவாசி மாணவர்களில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் தேர்வு எழுதிய 16,904 தனித்தேர்வகளில் 5,500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்

கூவாகம் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் த... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிர... மேலும் பார்க்க

சேலத்தில் தம்பதி வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

சூரமங்கலம்: சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: 91,414 பேர் விண்ணப்பம்!

பொறியியல் கலந்தாய்வுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 91 ஆயிரத்து 414 பேர் க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

புதுதில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால், வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் ம... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடி: 8 மாநிலங்களில் 42 இடங்களில் சிபிஐ சோதனை

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 8 மாநிலங்களில் 42 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 5’ என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க