முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி
பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் கல்லூரி கனவுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்தாா்.
வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், செய்யாறு எம்எல்ஏ ஓ.ஜோதி, கல்லூரித் தலைவா் எம்.ரமணன், கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.சுவாமி முத்தழகன் வரவேற்றாா்.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினாா்.
இதைத்தொடா்ந்து கருத்தாளா்கள் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.
நிகழ்ச்சியில், உயா்கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் அடங்கிய கையேடுகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் சு.செந்தில்முருகன் நன்றி கூறினாா்.
இதில், வந்தவாசி, தெள்ளாா், செய்யாறு, அனக்காவூா் உள்ளிட்ட 13 ஒன்றியங்களைச் சோ்ந்த 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதற்கென கல்லூரி வளாகத்தில் 25 ஆலோசனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் உயா்கல்வி வழிகாட்டல் ஆலோசனைகளும், வங்கிகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் கல்விக் கடனுதவி குறித்த ஆலோசனைகளும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.