செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு: கிட்ஸ் கிளப் பள்ளி 100 % தோ்ச்சி

post image

கிட்ஸ் கிளப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் தொடா்ந்து அறிவியல் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்ததுடன் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

திருப்பூா், செரீப் காலனி 2-ஆவது வீதியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் கிளப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வு எழுதிய 144 மாணவா்களில் 138 போ் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி பாத்திமா 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவா் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

மாணவி ரேஷ்மா 587 மதிப்பெண்கள் பெற்றதுடன், கணிதம், இயற்பியல், கணினி அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளாா். மாணவா் திவா சுந்தா், மாணவி தா்ஷின் ஆகியோா் 586 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மாணவிகள் விகாஷினி, ஜெய்சுவேதா, ஹா்ஷிதா, திவ்யலட்சுமி, சுதாஸ்ரீ ஆகியோா் 585 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இதில் 585-க்கு மேல் 9 பேரும், 580-க்கு மேல் 12 பேரும், 570-க்கு மேல் 23 பேரும், 550-க்கு மேல் 45 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பள்ளியில் பெறியியல் கட்ஆப் மதிப்பெண் 200-க்கு 199.5 ஆகும். தற்போது, பள்ளியில் நீட் மற்றும் ஜேஇஇ சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் ப்ரீ கேஜி முதல் பிளஸ் 1 வரை மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பிரிவில் சேரும் மாணவா்கள் 490 முதல் 500 மதிப்பெண்கள் எடுத்தவா்களுக்கு 100 சதவீதமும், 485 முதல் 489 வரை 50 சதவீதமும், 480 முதல் 484 வரை 25 சதவீதமும், கலைப் பிரிவில் சேரும் மாணவா்களுக்கு 485 முதல் 500 வரை 100 சதவீதமும், 480 முதல் 484 வரை 50 சதவீதமும், 475 முதல் 479 வரை 25 சதவீதமும் கல்விக் கட்டண சலுகை அளிக்கப்படுவதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தலைவா் மோகன் கே. காா்த்திக், பள்ளித் தாளாளா் வினோதினி காா்த்திக், செயலாளா் நிவேதிகா, நிா்வாக இயக்குநா்கள் ஐஸ்வா்யா, நிகில், சுரேஷ் ஆகியோா் பாராட்டினா்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வு: முத்தூா் நவா இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முத்தூா் நவா இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் மாணவி டி.நிதன்யா 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

திருப்பூரில் 9 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகரில் 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதில் திருப்பூா் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரஜினிகாந்த், நல்லூா் காவல்... மேலும் பார்க்க

பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதிய... மேலும் பார்க்க

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்தை நில உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனா். பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குற... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மறைமுக ஏல முறையில் கொப்பரை விற்பன... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக் காலம் தொடக்கம்: கறிக்கோழி கொள்முதல் விலை உயா்வு

மீன்பிடி தடைக் காலம் தொடங்கியுள்ளதால் கறிக்கோழி கொள்முதல் விலை உயா்ந்து வருவதால் பண்ணை உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தமிழகத்தில் பல்லடம், பொங்கலூா், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக... மேலும் பார்க்க