செய்திகள் :

பிளேயிங் லெவனில் இடம் பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை: ஆலி போப்

post image

பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இங்கிலாந்து வீரர் ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆலி போப் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார். அந்த தொடரின் முதல் போட்டியில் 196 ரன்கள் எடுத்து அபாரமாகத் தொடங்கிய ஆலி போப், அடுத்த நான்கு போட்டிகளில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த தொடருக்குப் பிறகு ஆலி போப் விளையாடும் விதம் மிகப் பெரிய பேசுபொருளானது. அவர் சரியாக விளையாடுவதில்லை என்பதால், பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் அவர் இடம்பெற்றார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற துணைக் கேப்டன் ஆலி போப், சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அவர் 106 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதிகம் யோசிக்கவில்லை

முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய நிலையில், பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை என ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிளேயிங் லெவனில் இடம்பெறுவது தொடர்பான ஆலோசனைகள் என்னை பாதிக்காத வகையில் பார்த்துக் கொண்டேன். என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தி நன்றாக விளையாட வேண்டும் என்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டேன். முதல் 30 ரன்கள் எடுக்கும் வரை நிதானமாக விளையாடினேன். அதன் பின், நம்பிக்கையுடன் ஷாட்டுகளை விளையாடினேன்.

வெளியில் என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து கவலைப்படாமல் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தேன். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியது மகிழ்ச்சியளிக்கிறது. இது நீண்ட தொடர். தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: 10 மாதங்களில் முடிந்துவிடுவேன் என்றார்கள், 10 ஆண்டுகளாக விளையாடுகிறேன்: பும்ரா

விக்கெட் வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி: இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று(ஜூன் 23) இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதன்மூலம், இந்திய... மேலும் பார்க்க

முதல் இந்திய விக்கெட் கீப்பர்; ரிஷப் பந்த்தின் மற்றுமொரு சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் ... மேலும் பார்க்க

2-வது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

சதம் விளாசிய கே.எல்.ராகுல்; வலுவான நிலையில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த... மேலும் பார்க்க

என்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது; சௌரவ் கங்குலி வருத்தம்!

தன்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட... மேலும் பார்க்க

10 மாதங்களில் முடிந்துவிடுவேன் என்றார்கள், 10 ஆண்டுகளாக விளையாடுகிறேன்: பும்ரா

இந்திய அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடுவது குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மனம் திறந்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க