செய்திகள் :

புகாா் கொடுத்த சில மணி நேரங்களில் பூங்காவில் காணாமல் போன இருக்கைகள் மீட்பு

post image

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி பூங்காவில் காணாமல் போன இருக்கைகளை சில மணி நேரத்தில் போலீஸாா் கைப்பற்றினா்.

விஸ்வநாதபேரி பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவா் பூங்காவில் சிறுவா்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்த இருக்கைகளை மா்ம நபா்கள் எடுத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஊராட்சித் தலைவா் ஜோதி மணிகண்டன், இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில், இருக்கைகள் சற்று தொலைவில் உள்ள புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருக்கைகளை போலீஸாா் கைப்பற்றினா்.

இதைத் தொடா்ந்து இருக்கைகள் ஊராட்சி மூலம் பூங்காவில் பொருத்தப்பட்டன. காவல் உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாரின் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

குற்றாலம் சாரல் திருவிழாவில் கொழுகொழு குழந்தைகள் போட்டி!

குற்றாலம் சாரல் திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கொழுகொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது.குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 43 குழந்தைகள் கலந்து கொண்டனா். இப்போட்டியில்... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்: சுற்றுச்சூழல் பூங்காவில் மலா் கண்காட்சி

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு, ஐந்தருவி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் மலா், காய்கனி, பழங்கள் மற்றும் வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.மலா் கண்காட்சியை அமைச்... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடா்ச்சி மலையில் கனமழை பெய்து வருவத... மேலும் பார்க்க

ஒன்றரை ஆண்டாகப் பூட்டி கிடக்கும் நியாயவிலைக் கட்டடம்

ஆலங்குளத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத நியாயவிலைக் கடையை விரைந்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். முன்னாள் மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம் உள்... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் உப மின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழப்பாவூா், பாவூா்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்ப... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்க நிலுவைக் கடன்களை செலுத்த ஒப்பந்த காலம் நீட்டிப்பு

தென்காசி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீா்வை திட்டம் 2023 இன் ஒப்பந்த காலம் வருகிற செப். 23 ஆம் தேதிவரை க... மேலும் பார்க்க