செய்திகள் :

புகைப்பட பிரியர்களுக்கு... விவோ அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்!

post image

புகைப்படம் மற்றும் விடியோ எடுப்பதற்காகவே விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

முதலில் சீனாவிலும் அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்ய விவோ திட்டமிட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், எக்ஸ் 200 என்ற ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எக்ஸ் 200 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க அதிக நாட்டமுடையவர்களை இலக்காக வைத்து இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவில் எக்ஸ் 200 அல்ட்ராவை அறிமுகப்படுத்த விவோ திட்டமிட்டுள்ளது. விவோ எக்ஸ் 200, விவோ எக்ஸ் 200 ப்ரோ, விவோ எக்ஸ் 200 மினி ஆகிய ஸ்மார்ட்போன்கள் சீனாவில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே விவோ எக்ஸ் 200 அல்ட்ரா மட்டும் இல்லாமல், விவோ எக்ஸ் 200எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவும் விவோ திட்டமிட்டுள்ளது. இதனால் சீன ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனத்தின் வெளியீடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

சிறப்பம்சங்கள்

விவோ எக்ஸ் 200 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது சாம்சங் நிறுவனத்தின் எச்பி-9 சென்சார் கொண்ட 200MP கேமராவுடன் வெளியாகிறது.

இதோடு மட்டுமின்றி சோனி நிறுவனத்தின் எல்.ஒய்.டி. - 818 (LYT-818) சென்சார் கொண்ட 50MP கேமராவும் உடன் உள்ளது. முன்பக்கம் 50MP செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கேமராக்களுக்கு பெயர் பெற்ற இரு நிறுவனங்களின் சென்சார்கள் உள்ளதால், புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுப்பதில் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும்.

நீண்ட நேரம் விடியோ எடுக்கும் வகையில் 6000mAh திறன் கொண்ட பேட்டரியும் 90W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் விவோ எக்ஸ் 200 அல்ட்ரா எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை விவோ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! காரணம் என்ன?

மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, 5ஜி இணைய ... மேலும் பார்க்க

ஐபிஎல் ரசிகர்களுக்காக... இன்றுடன் முடிகிறது ஜியோ வழங்கிய சலுகை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் வழங்கிய சலுகை இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெறவுள்ளது. மேலும் பார்க்க

ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!

புதுதில்லி: ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுமத்தின் அங்கமான ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 80% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்த போவதாக டாடா ஆட்டோகாம்ப் இன்று தெரிவித்தது... மேலும் பார்க்க

நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.சமீபத்தில் கும்பகோணம், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆலப்... மேலும் பார்க்க

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க