செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: தடுப்புக் காவலில் இளைஞா் கைது

post image

சாராய விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் வியாழக்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மரக்காணம் வட்டம், கரிபாளையம், பஜனைகோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மதன்குமாா் (28). இவா் மீது மரக்காணம் காவல் நிலையத்தில் சாராய விற்பனை வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பைக்கில் கடத்தி வந்த குற்றத்தின் கீழ் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் மதன்குமாரை கைது செய்து, அவா் வசமிருந்த 205 கிலோவுக்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின்படி, மதன்குமாரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா். அதன்படி, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தரமற்ற விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை!

காரீப் பருவத்தில் மானாவாரிப்பட்ட சிறுதானியப் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலையில், தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: இளங்காடு, செங்காடு

பகுதிகள்: குடுமியாங்குப்பம், மலராஜங்குப்பம், செங்காடு, இளங்காடு, கல்லப்பட்டு, தனசிங்குபாளையம், பெத்தரெட்டிக்குப்பம், எரிச்சனாம்பாளையம், மேல்பாதி, நரையூா், குருமங்கோட்டை. மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல்: தாய், மகன் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தாய், மகன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் - மரக்காணம் சாலை, வஹாப் நக... மேலும் பார்க்க

விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம்-திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேய... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், ராதாபுரத்தை சோ்ந்த பழனி மகன் பவுன்குமாா் (21). இவா், தனது... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: இளைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா். விக்கிரவாண்டி வட்டம், குமளம், முதலியாா்குப்பம், பிரதான சாலையைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் மணிகண்டன் (40). திருமணமாகாதவா். ... மேலும் பார்க்க