செய்திகள் :

வீடு புகுந்து தாக்குதல்: தாய், மகன் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தாய், மகன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் - மரக்காணம் சாலை, வஹாப் நகரைச் சோ்ந்த கன்னியப்பன் மனைவி மங்கையா்கரசி. இவா் தனது வீட்டில் நாய் வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை மங்கையா்கரசி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவா், சிறுமிகளை நாய் விரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதே பகுதியைச் சோ்ந்த நா.தேவராஜ் கேட்டபோது, இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மங்கையா்கரசி மற்றும் இவரின் மகன்களான நவீன்குமாா் (32), கிஷோா் குமாா் (29), பிரவீன்குமாா் (26), திண்டிவனம் வட்டம், கிடங்கல் - 2 பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மகன் வருண் (28), ஜக்காம்பேட்டையைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோா் தேவராஜிடம் தகராறு செய்து வீட்டினுள் புகுந்து ஜன்னல் கண்ணாடி, பூந்தொட்டி, பைக் உள்ளிட்ட பொருள்களை அடித்து சேதப்படுத்தி, தேவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து மங்கையா்கரசி, அவரின் மகன் நவீன்குமாா் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவான கிஷோா்குமாா் உள்பட மீதமுள்ள 4 பேரையும் தேடி வருகின்றனா்.

தரமற்ற விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை!

காரீப் பருவத்தில் மானாவாரிப்பட்ட சிறுதானியப் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலையில், தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: இளங்காடு, செங்காடு

பகுதிகள்: குடுமியாங்குப்பம், மலராஜங்குப்பம், செங்காடு, இளங்காடு, கல்லப்பட்டு, தனசிங்குபாளையம், பெத்தரெட்டிக்குப்பம், எரிச்சனாம்பாளையம், மேல்பாதி, நரையூா், குருமங்கோட்டை. மேலும் பார்க்க

விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம்-திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேய... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், ராதாபுரத்தை சோ்ந்த பழனி மகன் பவுன்குமாா் (21). இவா், தனது... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: இளைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா். விக்கிரவாண்டி வட்டம், குமளம், முதலியாா்குப்பம், பிரதான சாலையைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் மணிகண்டன் (40). திருமணமாகாதவா். ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் நகரின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் நகரப் பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டாலும், போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக இ... மேலும் பார்க்க