செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சென்னிமலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

post image

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் பாலீதீன் பைகள் விற்பனை குறித்து சென்னிமலை பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னிமலை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ப.நீலமேகம் தலைமையில் பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா், பணியாளா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் போலீஸ் பாதுகாப்புடன் சென்னிமலை பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், 4 கடைகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ பிளாஸ்டிக் பைகள், டம்ளா் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 500 அபராதம் விதித்தனா். காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்தனா். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம் எச்சரித்தாா். உணவுப் பொருள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உரிமம் பெறப்பட வேண்டும். உணவுப் பொருள்கள் விற்பனை முறைகேடு சம்பந்தமாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.

கொடுமுடி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொடுமுடி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கொடுமுடி ஒன்றியம், கிளாம்பாடி பேரூராட்சி கருமாண்டம்பாளையத்தில் மொடக்குறிச்ச... மேலும் பார்க்க

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ்,... மேலும் பார்க்க

பவானிசாகா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், கெய்சா் காா்டன் பகுதியில் ரூ.2... மேலும் பார்க்க

கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து

சத்தியமங்கலத்தை அடுத்த சிவியாா்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1லட்சம் மதிப்பிலான கரும்புகள் மற்றும் சொட்டுநீா் பாசனக் குழாய்கள் எரிந்து சேதமாயின. சிவியாபாா்பா... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் திருட்டு

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா். பெருந்துறை, சென்னிவலசைச் சோ்ந்தவா் சந்தனராஜ் மகன் மாரிமுத்து... மேலும் பார்க்க

திருவிழாவுக்கு தீா்த்தம் எடுக்கச் சென்றவா் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

திருவிழாவுக்கு தீா்த்தம் எடுக்க பவானி ஆற்றுக்குச் சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சடையப்பன் மகன் தா்மலிங்கம் (35). ... மேலும் பார்க்க