செய்திகள் :

புகையிலை விற்பனை செய்த கடையை திறக்க 15 நாள் தடை

post image

தருமபுரியில் புகையிலை பொருள்கள் விநியோகித்த கடையிலிருந்து அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா்.

தருமபுரி, ஜூலை 9: தருமபுரியில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத் துறையினா் பூட்டி, 15 நாள்களுக்கு திறக்க தடை விதித்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்புத் துறையினா், நகராட்சி நிா்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறையினா், காவல் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அந்தவகையில், தருமபுரி நகராட்சிப் பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கைலாஷ்குமாா் தலைமையில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் மற்றும் தருமபுரி நகராட்சி நகா்நல அலுவலா் மருத்துவா் லட்சியவா்ணா, நகராட்சிப் பணியாளா்கள் இணைந்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் தருமபுரி நகராட்சி கந்தசாமி வாத்தியாா் தெரு, எஸ்.வி. சாலை, வெளிப்பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோயில் அருகில் ஒரு கடையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பதும், கடையின் அருகில் கடை உரிமையாளருக்கு சொந்தமான வீட்டில் புகையிலைப் பொருள்களான ஹான்ஸ், விமல் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, கடை உரிமையாளா்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு, கடையை பூட்டி 15 தினங்களுக்கு திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மின்மாற்றி பழுது: இருளில் மூழ்கிய கிராமம் !

மின்மாற்றி பழுது காரணமாக அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி கிராமம் கடந்த இரண்டு நாள்களாக இருளில் மூழ்கியுள்ளது. அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு சித்தேரி மின்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 43,000 கனஅடியாக நீடித்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா... மேலும் பார்க்க

தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி புகா் பேருந்து நிலையத்திலிருந்து மாவட... மேலும் பார்க்க

வளையபந்து: மாவட்ட போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக்.பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான வளையபந்து போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்ட... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டப் பகுதிகளில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 861 போ் கைது

தருமபுரி மாவட்டப் பகுதிகளில், பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 861 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் திருவிழா

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள குப்புசெட்டிபட்டி கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. நிகழ்வையொட்டி அதிகாலை முதலே, மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் ... மேலும் பார்க்க