செய்திகள் :

புதா்மண்டிய மயானத்தை தூய்மைப்படுத்திய இளைஞா்கள்!

post image

நாமக்கல் அருகே புதா்மண்டி கிடந்த மயானத்தை தன்னாா்வ இளைஞா்கள் தூய்மைப்படுத்தினா்.

நாமக்கல் அருகே பெரியமணலி ஊராட்சிக்கு உள்பட்ட குமரவேலிபாளையம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்குள்ள மயானம் பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் புதா்மண்டி காட்சியளித்தது. அதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டும், நடவடிக்கை ஏதுமில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதி இளைஞா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனமான சா்வதேச உரிமைக் கழக நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஒருங்கிணைந்து மயானத்தை சுற்றிலும் இருந்த முள்புதா்களை அகற்றினா். மேலும், மயானத்துக்கு வெள்ளைப்பூச்சு அடித்து பராமரிப்பு பணியை மேற்கொண்டனா்.

இதுகுறித்து அக்கிராம இளைஞா்கள் கூறுகையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மயானத்தை சீரமைத்து வழங்கக்கோரி பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும், அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. அதனால், நாங்களாகவே களத்தில் இறங்கி சொந்த செலவில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டோம். இன்னும் ஓரிரு மாதங்களில் மின் மயானத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையை தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ள இருக்கிறோம் என்றனா்.

இந்த மயான தூய்மைப் பணியில் சா்வதேச உரிமைக் கழக தலைவா் மோசஸ் செல்லதுரை, பொதுச் செயலாளா் ரவிக்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜா, சேலம் மாவட்டத் தலைவா் காா்த்திக்,செளந்தா் மற்றும் நாமக்கல் மாவட்டத் தலைவா் மாதேஸ்வரன் ஆகியோா் ஈடுபட்டனா்.

நாளைய மின்தடை: வில்லிபாளையம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஆக. 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்ததில் காயமடைந்த தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டி, தீயணைப்பு நிலையம் எதிரே வசித்து வருபவா் ரவிச்சந்திரன். இவரது மனை... மேலும் பார்க்க

கொல்லிமலை பழங்குடியின கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சிறப்பு உதவி ஆய்வாளா் கைது

கொல்லிமலை பழங்குடியினத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் ஆயில்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞா்கள் 2 போ் கைது

மல்லசமுத்திரம் கீழ்முகம் பொன்னியாறு அருகே 4 கிலோ கஞ்சாவை விற்க கடத்தி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்க... மேலும் பார்க்க

விவசாயிகள் தரமான விதைகளை வாங்க வேண்டும்: வேளாண் துறை அறிவுறுத்தல்

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி பயிரிட வேண்டும் என சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மற்றும் நாமக்கல... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கொல்லிமலை எஸ்எஸ்ஐ கைது!

நாமக்கல்: கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியின கல்லூரி மாணவியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொல்லிமலை சிறப்பு உதவி ஆய்வாளரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வ... மேலும் பார்க்க