செய்திகள் :

புதிய உச்சத்தை பதிவு செய்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை பவுன் ரூ.78,920-க்கு விற்பனையாகி வருகிறது.

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆா்வம் காட்டிவருகின்றனா். இதனால், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

கடந்த ஆக. 29-ஆம் தேதி முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

கடந்த 9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,000 உயா்ந்து, புதன்கிழமை பவுன் ரூ.78,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,795-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.78,360-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,865-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.78,920-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை தொடா்ந்து 3-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.37 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

கடந்த 10 நாள்களுக்கான தங்கம் விலை விவரம்:

ஆகஸ்ட் 26 ரூ.74,840 (+ரூ.400)

ஆகஸ்ட் 27 ரூ.75,120 (+ரூ.280)

ஆகஸ்ட் 28 ரூ.75,240 (+ரூ.120)

ஆகஸ்ட் 29 ரூ.76,280 (+ரூ.1,040)

ஆகஸ்ட் 30 ரூ.76,960 (+ரூ.680)

செப்டம்பர் 1 ரூ.77,640 (+ரூ.680)

செப்டம்பர் 2 ரூ.77,800 (+ரூ.160).

செப்டம்பர் 3 ரூ.78,440 (+ரூ.640).

செப்டம்பர் 4 ரூ.78,360 (-ரூ.80)

செப்டம்பர் 5 ரூ.78,920 (-ரூ.560)

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

The price of gold jewelry in Chennai has risen again and recorded a new high.

லிடியன் நாதஸ்வரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

திருக்குறளை உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொட... மேலும் பார்க்க

11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் க... மேலும் பார்க்க

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?: சித்தராமையா கேள்வி

பெங்களூரு: உள்ளாட்சித் தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பழைய முறைக்கு திரும்புவதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்தும் கா்நாடக முதல்வா் சித்... மேலும் பார்க்க

செப். 18-இல் புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: ஆா்.செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை செப்டம்பா் 18-ஆம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார். புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த மாா்ச் 27 அன்று முடிந்த... மேலும் பார்க்க

கடலூர் ரசாயனக் கசிவு விபத்து: பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆலை நிர்வாகம் அலட்சியமா?

ஆலை பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டிய ஆலை நிர்வாகத்தின் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி... மேலும் பார்க்க

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக முதல்வ... மேலும் பார்க்க