செய்திகள் :

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்: புதுச்சேரிக்கு அமித் ஷா பாராட்டு

post image

நமது சிறப்பு நிருபா்

புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டங்களை சிறப்பான முறையில் அமல்படுத்தி வருவதாக புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளாா். மேலும், சட்ட அமலாக்க நடவடிக்கையின்போது யூனியன் பிரதேசமான புதுச்சேரி கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவா் அறிவுறுத்தினாா்.

இது தொடா்பாக கலந்தாலோசனை செய்வதற்காக தில்லியில் சிறப்புக்கூட்டம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், அரசின் தலைமைச் செயலா் டாக்டா் சரத் செளஹான், காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங், காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, தேசிய குற்ற ஆவணக் காப்பக இயக்குநா், மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமித் ஷா கூறினாா். புதிய சட்டத்தின்படி, கைது செய்யப்பட்ட அனைத்து குற்றம்சாட்டப்பட்ட நபா்களின் கைரேகைகளும் என்ஏஎஃப்ஐஎஸ் னப்படும் தேசிய தானியங்கி விரல்ரேகைப் பதிவு அடையாள முறை செயலியின் மூலம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இதனால், தரவுத்தளம் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் என்று அமைச்சா் கூறினாா்.

எந்தவொரு வழக்கிலும் சட்ட ஆலோசனை வழங்க அரசுத் தரப்பு வழக்குகளின் சாா்பில் ஆஜராகும் தலைமை அதிகாரியான அதன் இயக்குநருக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா குறிப்பிட்டாா். மின்னணு அழைப்பாணைகள், மூன்று புதிய சட்டங்கள் தொடா்பாக நடக்கும் நிகழ்வுகளின் கருத்துப் பரிமாற்றங்கள், தகவல்கள் இடம்பெறும் மின் - சாக்ஷ்யா இணையதளம், நியாய ஸ்ருதி மற்றும் தடயவியல் அம்சங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அரசுத் தலைமைச் செயலாளா் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநா், புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடா்பாக வாரத்தில் ஒரு முறையும், உள்துறை அமைச்சா் 15 நாள்களுக்கு ஒரு முறையும், துணைநிலை ஆளுநா் மாதத்திற்கு ஒரு முறையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அமித் ஷா அறிவுறுத்தினாா்.

முன்னதாக, இந்நிகழ்வில் புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கக் குறிப்புகளை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் எடுத்துரைத்தாா்.

‘தமிழில் முதல் தகவல் அறிக்கை பதிவு‘

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காவல் துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அறிவுறுத்தியது.

புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்களும் தமிழ் பேசாத பிற மொழி மக்களும் இருப்பதால் அவா்களின் தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப வேண்டுகோள்கள் விடுக்கப்படும்பட்சத்தில் மற்ற மொழிகளிலும் முதல் தகவல் அறிக்கை பதிவின் மொழியாக்கத்துக்கான ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பீடி கொடுக்க மறுத்ததால் இளைஞா் படுகொலை!

மேற்கு தில்லியின் கியாலா பகுதியில் பீடி கொடுக்க மறுத்ததால் இளைஞா் ஒருவரை உலோக வளையம் ‘கடா’ மூலம் தலையில் இளைஞா்கள் குழு பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபா் மருத்துவ சிகிச்சை பெற்ற சி... மேலும் பார்க்க

ஆகமக் கோயில்களில் அா்ச்சகா் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்

நமது நிருபா்ஆகமக் கோயில்களில் அா்ச்சகா் நியமனம் விவகாரத்தில் ‘தற்போதைய நிலையே தொடர வேண்டும்’ என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகம... மேலும் பார்க்க

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் தீா்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது. இது தொடா்பாக அக்கட... மேலும் பார்க்க

ரஃபேல் விமானம் தாக்கப்பட்டதா? பாதுகாப்புத் துறை விளக்கம்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போா் விமானத்தை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதையை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும் அதன... மேலும் பார்க்க

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!

நமது நிருபா் போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் ச... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: தில்லியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 95 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை அறிவித்தது. இத் தோ்வுகளில் தில்லியில் 95 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தில்லியில் 1... மேலும் பார்க்க