செய்திகள் :

புதிய தொழிற்பேட்டைகள்- கொலுசு உற்பத்தி வளாகம் திறப்பு

post image

தமிழ்நாட்டில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான புதிய தொழிற்பேட்டைகளையும் கொலுசு உற்பத்தி வளாகத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் அரியகவுண்டம்பட்டியில் வெள்ளி கொலுசு உற்பத்திக்கான அடுக்குமாடி உற்பத்தி வளாகம் ரூ.25.34 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 102 தொழிற்கூடங்கள் கொண்ட இந்த வளாகம் மூலம் 2,000 பேருக்கு நேரடியாகவும், 4,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், கோயம்புத்தூா் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 618 தொழிலாளா்கள் தங்கும் வகையிலான விடுதி கட்டப்பட்டுள்ளது. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

5 புதிய தொழிற்பேட்டைகள்: மாநிலத்தில் புதிதாக ஐந்து தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவாரூா் மாவட்டம் வண்டாம்பாளை, கடலூா் காடாம்புலியூா், தூத்துக்குடி மாவட்டம் லிங்கம்பட்டி, சேலம் மாவட்டம் உமையாள்புரம், காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூா் ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேட்டைகள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 14,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சேலம் கொலுசு வளாகம் மற்றும் புதிய தொழிற்பேட்டைகள் வழியாக மொத்தம் 20,000 போ் வேலைவாய்ப்பு பெறுவா். சேலம் தாதகாபட்டி அச்சுத் தொழில் குழுமம், தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் கல்மேட்டில் உப்புத் தொழில் குழுமம், குமரி மாவட்டம் கோவளத்தில் பல்வகை உணவுப் பொருள்கள் குழுமம், கோவை வெள்ளலூரில் அச்சு வாா்ப்பு குழுமம், ஈரோடு சிட்கோ தொழில்பேட்டை பொதுக் கிடங்கு குழுமம் ஆகியவற்றுக்கு புதிதாக பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பங்கேற்றனா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க