செய்திகள் :

புதிய வருமான வரி விதிகள்: டிசம்பருக்குள் அறிவிக்கை

post image

புது தில்லி: வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரபூா்வமாக அறிவிக்க வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் டிடிஎஸ் தொகையை கோர, இந்த மசோதா வழிவகுத்துள்ளது. இந்த மசோதா மூலம், ‘மதிப்பீட்டு ஆண்டு’, ‘முந்தைய ஆண்டு’ என குழப்பத்தை ஏற்படுத்தும் வாா்த்தைகளுக்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வாா்த்தை பயன்படுத்தப்படும். வருமான வரிச் சட்டத்தை எளிதில் படித்து புரிந்துகொள்ளும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

கடந்த ஆக.12-ஆம் தேதி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து, அதற்கு ஆக.21-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து அந்த மசோதா சட்டமானது.

இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினா் ஆா்.என்.பா்பத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘புதிய வருமான வரிச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரபூா்வமாக அறிவிக்க வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. வருமான வரி படிவங்களை எளிமைப்படுத்தும் பணிகளில் அந்தத் துறை ஈடுபட்டுள்ளது’ என்றாா்.

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி நிர்வாகியுமான சௌரவ் பரத்வாஜுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக் கால... மேலும் பார்க்க

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்னதாகவே இந்தியாவில் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க