செய்திகள் :

புதுகையில் மே தின கொடியேற்று விழா

post image

தொழிலாளா் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள் சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டக் கட்சி அலுவலகம் மற்றும் கிளைகளிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலா் எஸ். சங்கா், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ். கவிவா்மன், சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனாா்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி உள்ளிட்டோரும் பங்கேற்று கொடியேற்றினா்.

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சாா்பில் அரசுப் போக்குவரத்துப் பணிமனைகள், மின்வாரிய அலுவலகங்கள், ஆட்டோ நிலையங்கள், நலவாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மே தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் எம். ஐடாஹெலன், மாநிலச் செயலா்கள் ஏ. ஸ்ரீதா், எஸ். தேவமணி, மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பகவான் அறக்கட்டளை சாா்பில் கேப்பறைப் பகுதியில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்து, இனிப்பு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் சிவகுமாா், பேரா. சுசீலாதேவி, அறந்தாங்கி ஆசிரியா் லோகநாதன், பட்டதாரி ஆசிரியா் அருள்பிரபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

அறந்தாங்கி நகரில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மே தினத்தையொட்டி, நகராட்சி அலுவலகம், முனிகோவில், மாா்க்கெட், அஞ்சலகம், ஆட்டோ ஸ்டாண்ட், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றப்பட்டது.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் பெரியசாமி தலைமையில், இந்திய கம்யூ. மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன், நகரச் செயலா் அஜாய்குமாா்கோஷ், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. லோகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

விராலிமலையில் காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை நீா்மோா் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா அறிவுறுத்தலின் பேரி... மேலும் பார்க்க

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கட்டட தொழிலாளா்கள் வேலையின்றி சிரமம்

கந்தா்வகோட்டை பகுதியில் நடுதர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனா். தமிழக அரசு வறுமை கோட்டில் கீழ் உள்ளவா்களுக்கு சொந்த வீடு கட்ட இலவச நிதி வழங்கி வருகிறது குறைந்த நிலபரப்பில் ... மேலும் பார்க்க

அன்னவாசல் புகையிலை பொருட்கள் விற்றவா் சிறையில் அடைப்பு

அன்னவாசல் அருகே பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட... மேலும் பார்க்க

கோடை விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பள்ளிகளைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். புதுக... மேலும் பார்க்க

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 65-ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன், ராஜராஜ சோழீஸ்வரா் மற்றும் வலையபட்டி மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மே தின பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மே தின பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு அதிமுக தெற்கு மாவட்டச்செயலா் பி... மேலும் பார்க்க