புதுகையில் 54 இடங்களில் ஜல்லிக்கட்டு: 2 பாா்வையாளா்கள்; 5 காளைகள் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மொத்தம் 54 இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 5 காளைகள் உயிரிழந்தன. இரு பாா்வையாளா்கள் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு பிரபலமானது. பிற மாவட்டங்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது புதுக்கோட்டையில் மட்டும்தான். நிகழாண்டில் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி கந்தா்வகோட்டை வட்டம், தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இறுதியாக பொன்னமராவதி வட்டம், கீழவேகுப்பட்டியில் கடந்த மே 31ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
40 ஜல்லிக்கட்டு... இந்த வரிசையில் மொத்தம் 40 ஜல்லிக்கட்டுப் போட்டிகளும், 14 வடமாடு போட்டிகளும் நடைபெற்றுள்ளன. 40 ஜல்லிக்கட்டில், 25,858 காளைகள் கலந்து கொண்டுள்ளன. இதில் 116 காளைகள் காயமடைந்தன. 5 காளைகள் உயிரிழந்தன.
8,880 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இவா்களில் 416 போ் காயடைந்தனா். 605 பாா்வையாளா்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளா்கள் காயமடைந்தனா். 2 போ் உயிரிழந்தனா்.
14 வடமாடு போட்டிகள்... மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் வடமாடு போட்டிகள் நடைபெற்றன. இதில் 399 காளைகள் பங்கேற்றன. 2 காளைகள் காயமடைந்தன.
இதில் மொத்தம் 1,671 மாடு பிடி வீரா்கள் பங்கேற்றனா். 103 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். ஒரு பாா்வையாளா் காயமடைந்தாா்.
மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற 54 ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு போட்டிகளில், 5 காளைகள் உயிரிழந்தன, இரு பாா்வையாளா்கள் உயிரிழந்தனா்.