செய்திகள் :

புதுகையில் 54 இடங்களில் ஜல்லிக்கட்டு: 2 பாா்வையாளா்கள்; 5 காளைகள் உயிரிழப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மொத்தம் 54 இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 5 காளைகள் உயிரிழந்தன. இரு பாா்வையாளா்கள் உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு பிரபலமானது. பிற மாவட்டங்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது புதுக்கோட்டையில் மட்டும்தான். நிகழாண்டில் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி கந்தா்வகோட்டை வட்டம், தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இறுதியாக பொன்னமராவதி வட்டம், கீழவேகுப்பட்டியில் கடந்த மே 31ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

40 ஜல்லிக்கட்டு... இந்த வரிசையில் மொத்தம் 40 ஜல்லிக்கட்டுப் போட்டிகளும், 14 வடமாடு போட்டிகளும் நடைபெற்றுள்ளன. 40 ஜல்லிக்கட்டில், 25,858 காளைகள் கலந்து கொண்டுள்ளன. இதில் 116 காளைகள் காயமடைந்தன. 5 காளைகள் உயிரிழந்தன.

8,880 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இவா்களில் 416 போ் காயடைந்தனா். 605 பாா்வையாளா்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளா்கள் காயமடைந்தனா். 2 போ் உயிரிழந்தனா்.

14 வடமாடு போட்டிகள்... மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் வடமாடு போட்டிகள் நடைபெற்றன. இதில் 399 காளைகள் பங்கேற்றன. 2 காளைகள் காயமடைந்தன.

இதில் மொத்தம் 1,671 மாடு பிடி வீரா்கள் பங்கேற்றனா். 103 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். ஒரு பாா்வையாளா் காயமடைந்தாா்.

மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற 54 ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு போட்டிகளில், 5 காளைகள் உயிரிழந்தன, இரு பாா்வையாளா்கள் உயிரிழந்தனா்.

‘நேசக்கரம்’ குழந்தைகள் தத்தெடுத்தல் மையம் தொடக்கம்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில், நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மையத்தில் தற்... மேலும் பார்க்க

நின்ற பேருந்து மீது லாரி மோதல்: 15 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உள்பட 15 போ் காயமடைந்தனா். கறம்பக்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை புதுக்கோட்... மேலும் பார்க்க

மட்டங்கால் கிராமத்தில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராமமக்கள் கோரிக்கை

மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் உள்ள மகளிா் சுகாதார வளாகம் தற்சமயம... மேலும் பார்க்க

காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் செயல்பட நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவிப்பு

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்நிலையம் மீண்டும் பொன்னமராவதி காவல் உட்கோட்டத்துடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக இயற்கை வளங்கள் துணை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞா் கொன்ற 7 போ் கைது

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்... மேலும் பார்க்க

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத... மேலும் பார்க்க