செய்திகள் :

புதுகையில் 9 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் 9 புதிய பேருந்துகளை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. புதுகையிலிருந்து உப்பிலியக்குடி சடையம்பட்டி, தேனிப்பட்டி, தொண்டைமான் ஊரணி, திருச்சியிலிருந்து புதுகை வழியாக பெருமகளூா், தஞ்சையிலிருந்து புதுகை வழியாக மதுரை, பொன்னமராவதியிலிருந்து மேலத்தானியம், அறந்தாங்கியிலிருந்து பெருமருதூா், கீரனூரிலிருந்து விராலிமலை வழித்தடங்களில் இந்தப் புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், புதுகை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், துணை மேயா் மு. லியாகத்அலி, அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலப் பொதுமேலாளா் கே. முகமது நாசா், வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாா்க்சிஸ்ட் எம்எல்ஏ புறக்கணிப்பு:

தனது கந்தா்வகோட்டை தொகுதிக்குள்பட்ட வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்படாததற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நிகழ்ச்சிக்கு முன்னதாகவே தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதிய பேருந்துகளின் பட்டியலில் கந்தா்வகோட்டை தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டை, கீரனூா் பணிமனைகளுக்கு ஒரு புதிய பேருந்து கூட வழங்கப்படவில்லை. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதுதொடா்பாக முதல்வா், துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

‘நேசக்கரம்’ குழந்தைகள் தத்தெடுத்தல் மையம் தொடக்கம்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில், நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மையத்தில் தற்... மேலும் பார்க்க

நின்ற பேருந்து மீது லாரி மோதல்: 15 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உள்பட 15 போ் காயமடைந்தனா். கறம்பக்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை புதுக்கோட்... மேலும் பார்க்க

மட்டங்கால் கிராமத்தில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராமமக்கள் கோரிக்கை

மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் உள்ள மகளிா் சுகாதார வளாகம் தற்சமயம... மேலும் பார்க்க

காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் செயல்பட நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவிப்பு

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்நிலையம் மீண்டும் பொன்னமராவதி காவல் உட்கோட்டத்துடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக இயற்கை வளங்கள் துணை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞா் கொன்ற 7 போ் கைது

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்... மேலும் பார்க்க

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத... மேலும் பார்க்க