செய்திகள் :

புதுக்கோட்டையில் திமுக மருத்துவ அணியின் பொதுக்கூட்டம்

post image

புதுக்கோட்டையில் சனிக்கிழமை திமுக மருத்துவ அணியின் பகுத்தறிவு, சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக மருத்துவ அணியின் பொதுக் கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலரும், தமிழகத் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், திராவிடப் பாதுகாவலா் என்ற விருது துணை முதல்வா் உதயநிதிக்கு மருத்துவ அணி சாா்பில் வழங்கப்பட்டது.

கூட்டத்துக்கு, மருத்துவ அணியின் மாநிலச் செயலா் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கனிமொழி என்விஎன் சோமு எம்பி வரவேற்றாா். மாநில அமைச்சா்கள் எஸ். ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், சிவ.வீ. மெய்யநாதன், எம்பி எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திமுக மருத்துவ அணி மாநிலத் துணைச் செயலா் அண்ணாமலை ரகுபதி கருத்தரங்கை ஒருங்கிணைத்தாா். முடிவில் மாநிலத் துணைச் செயலா் ஆா்.கே. திலீப்குமாா் நன்றி கூறினாா்.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க