மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
புதுக்கோட்டையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளன.
எனவே, 18 முதல் 35 வயதுக்குள்பட்ட எஸ்எஸ்எல்சி முதல் பட்டப் படிப்பு வரை முடித்த வேலைதேடுவோா் தங்களின் கல்வி உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.