செய்திகள் :

புதுக்கோட்டையை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்!

post image

புதுக்கோட்டையை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்டத் தூய்மைக் குழுவின் முதல் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது: மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை முறையாக தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை விரைவுபடுத்தவும், முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கவும் உள்ளாட்சி அமைப்பினா் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இப்பணிகளை முழுமைப்படுத்தி, மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் கே. ஸ்ருதி, ஊராட்சிகள் செயற்பொறியாளா் பரமசிவம், வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), சிவக்குமாா் (அறந்தாங்கி), அ. அக்பா்அலி (இலுப்பூா்) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

சிலம்பு ரயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும்

புதுக்கோட்டை வழியாக வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் செங்கோட்டை-சென்னை சிலம்பு விரைவு ரயிலை ஏழு நாள்களும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்... மேலும் பார்க்க

கருவூலத் துறை காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: மாநில செயற்குழு வலியுறுத்தல்

கருவூலத் துறையிலுள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ம... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி

கந்தா்வகோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் உயா்நிலை மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தஞ்சை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கந்தா்வகோட்டை அருகே சுங்கச்சாவடி அமைத்து அனைத்து வா... மேலும் பார்க்க

புதுக்கோட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை!

நேரடி நெல் கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல், அரவை செய்வதற்காக புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை ரயிலில் வந்தன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சம்பா நெல் அறுவடை நடைபெற்றதில், அரசின் ந... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்! - சுகாதாரம், போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 7,850 வழங்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்னமராவதி காந்தி சிலை எதிரே காங்கிரஸ் கட்சி நி... மேலும் பார்க்க