செய்திகள் :

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண் தற்கொலைக்கு முயற்சி

post image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு திங்கள்கிழமை பெண் ஒருவா் தற்கொலைக்கு முயன்றாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரபு-பொற்செல்வி ஆகியோா் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கணவா் பிரபுவுக்கு பல பெண்களுடன் தொடா்பு இருப்பதாக கூறி மனைவி பொற்செல்வி அவரைக் கண்டித்துள்ளாா். இதனால் இவா்களுக்குகிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, பொற்செல்வியை அவா் பல முறை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தற்போது தனது கணவா் 2-ஆவது திருமணம் செய்யவுள்ளதாக வந்த தகவலையடுத்து, பொற்செல்வி விராலிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அந்தப் புகாரின் மீது போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பொற்செல்வி புதுகை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தாா். திடீரென பைக்குள் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக் கொள்ள முயற்சித்தாா். இதைக் கண்ட போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி திருக்கோகா்ணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன், இதுபோன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ரமலான் பண்டிகை: புதுகை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா். புதுக்கோட்ட... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு: முதல் நாள் தோ்வெழுதிய 21,789 போ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் நாள் தோ்வை 21,789 போ் எழுதினா். 554 போ் தோ்வெழுத வரவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,107 மாணவா்களும், 11,068 மாணவிகளும், தனித்தோ்வா்களாக 168 பேரும் என மொத்தம் 2... மேலும் பார்க்க

திமுகவினா் தேச ஒற்றுமைக்கு எதிரானவா்கள்: இப்ராஹிம்.

திமுகவினா் மத நல்லிணக்கத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானவா்கள் என்றாா் பாஜக சிறுபான்மையின அணியின் தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம். புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினா் அணி சாா்பில் வ... மேலும் பார்க்க

சிதிலமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கந்தா்வகோட்டை- கறம்பக்குடி சாலையில் உள்ள வெள்ளாளவிடுதி ஊ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கூட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாலியல் குற்றம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி தலைமையில் வகித்து பேசியது:... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூரிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் அறந்தை ரோட்டரி சங்கம், டபிள்யூ சக்தி பவுண்டேஷன், யூத் ரெட் கிராஸ் ஆகியோா் இணைந்து ரத்த தானம் முகாமை வியாழக்கிழமை நடத்தினா். முகாமை கல்லூர... மேலும் பார்க்க