செய்திகள் :

புதுக்கோட்டை கொலை வழக்கில் புதிய திருப்பம்; தூங்கிய மகனை அடித்துக் கொன்ற தந்தை; என்ன நடந்தது?

post image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், மதுவுக்கு அடிமையாகி தினந்தோறும் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மதுபோதையில் மொட்டை மாடியில் தூங்குவதற்காகச் சென்றுள்ளார்.

காலை வெகுநேரமாகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த கணேசனின் மகன் மோகன் தாஸ் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்த போது அங்கு கணேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

murder
murder

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்திலிருந்தவர்களிடம் சொல்லியுள்ளார். இதனை அடுத்து அங்கு வந்த காவல் துறையினர் நேற்று சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கணேசனின் தந்தை கிருஷ்ணன் என்பவர் அதிகாலை 3 மணி அளவில், மது போதையில் மொட்டை மாடியில் படுத்திருந்த கணேசனை இரும்பு கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிக ரத்தம் வெளியேறி கணேசன் உயிரிழந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

murder
murder

அதனால், சந்தேகம் மரணம் என்ற பதியப்பட்ட வழக்கைக் கொலை வழக்காக மாற்றியதோடு, கிருஷ்ணனை காரையூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுபோதையில் தினமும் வீட்டில் உள்ளவர்களிடம் பிரச்னை செய்த மகனைத் தந்தையே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம், சங்கம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற ... மேலும் பார்க்க

கோவில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் கைவரிசை; நகை திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட ஐவர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ளது உத்திரகோசமங்கை. உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 4-ம் தேதி நடந்தது.இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வ... மேலும் பார்க்க

``பேய்கள் அழைக்கின்றன, செல்கிறேன்'' - கடிதம் எழுதி உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்.. என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (55). வருகின்றனர்.இவருக்கு3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். மர வேலை செய்து வரும் ராமசுப்பு தற்போது குருந்தன் கோட்டில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 800 போதை ஊசி குப்பிகள் பறிமுதல்; இருவர் கைது; போதை நகரமாகிறதா முத்து நகர்?

தூத்துக்குடியில் போதைப் பழக்கம் இளம் சிறார்கள் மத்தியில் சமீபகாலமாகப் பெருகிவருகிறது. விற்பனை செய்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் இளம் சிறார்களாக இருப்பதால் போலீஸாரின் பிடிக்குள் சிக்குவதில்லை.இதன் க... மேலும் பார்க்க

பீகார்: `எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?’ - 'போலி காவல் நிலையம்' நடத்தி வசூல் செய்த மோசடி கும்பல்

பீகார் மாநிலம், பூர்னியா மாவட்டத்தில் ஒரு மோசடி கும்பல் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் போலி காவல் நிலையம் ஒன்றை நடத்திவந்தது தற்போது தெரியவந்துள்ளது. சமஸ்திப்பூர் என்ற பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏ... மேலும் பார்க்க