2015-ல் 25 கோடி பேர்; தற்போது 95 கோடி பேருக்கு பயன்! பிரதமர் மோடி பெருமிதம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.19 ஆயிரம் கோடிக்கு கடன் வழங்க இலக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் (2025-26) மொத்தம் ரூ. 19,551 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வங்கியாளா்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, 2025-26-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டாா். இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ. 19,551 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயம் மற்றும் இணை செயல்பாடுகள் துறைக்கு ரூ. 14,265 கோடியும், தொழில் துறைக்கு ரூ. 1,369 கோடியும், வீட்டு வசதித் துறைக்கு ரூ. 44 கோடியும், கல்வித் துறைக்கு ரூ. 25.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து கடன்களை வழங்கவும், விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் மீன் வளா்ப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கவும் வங்கியாளா்களை ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டாா். கூட்டத்துக்கு, மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் காரைக்குடி மண்டல முதன்மை மேலாளா் எம்.டி. ஷாரேயன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் தீபக்குமாா், தாட்கோ மேலாளா் எல். அனிட்விமலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.