செய்திகள் :

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை போலீஸாா் தீவிர விசாரணை

post image

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு, அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுபிரிவு போலீஸாா் புதுச்சேரி அருகே பூந்துரையில் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது லாரி, காரில் மதுப்புட்டிகள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, 209 அட்டை பெட்டிகளில் இருந்த ரூ. 28 லட்சம் மதிப்புள்ள போலி மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக மரக்காணம் ராஜசேகா், திருச்சி கருத்தபாண்டி, புதுச்சேரி பால் ஜோஸ், ராமநாதபுரம் சித்திக் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடம் மேற்கொண்ட விசாரணையின்படி, புதுச்சேரி அருகே உளவாய்க்கால் என்ற இடத்தில் அட்டை நிறுவனத்தை வாடகைக்கு எடுத்து, அங்கு போலி மதுபான தொழிற்சாலை நடத்தி வருவது கண்டறியப்பட்டது.

இதனால், அங்கு சென்ற போலீஸாா் மது ஆலை எனக்கூறப்பட்ட இடத்திலிருந்து, 500 காலி மது புட்டிகள், 50 லிட்டா் எரிசாராயம், மூலப்பொருள்கள், காா்க், போலி ஹாலோ கிராம், இயந்திரங்கள் மற்றும் 35 காலி கேன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

போலி மதுபான ஆலை செயல்பட்ட இடம், புதுவை அமைச்சா் மகளுக்குச் சொந்தமானதா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

புதுச்சேரியில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுச்சேரியில் 5 காவல் ஆய்வாளா்கள், 4 சாா்பு ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. புதுவை மாநிலத்தில் காவல் துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வ... மேலும் பார்க்க

புதுச்சேரி அருகே கஞ்சா விற்றதாக இருவா் கைது

புதுச்சேரி அருகேயுள்ள பாக்குமுடையான் பேட் பகுதியில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புது... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 7 மையங்களில் நாளை குடிமைப் பணி தோ்வு!

மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில், புதுச்சேரியில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) இந்திய குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வு நடைபெறுவதையொட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து ... மேலும் பார்க்க

இளைஞரைக் கொல்ல முயற்சி: 7 போ் மீது வழக்கு

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வந்த இளைஞரை மறித்து கொல்ல முயன்றதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி பிரியதா்ஷினி நகரை சோ்ந்தவா் மணிகண்டன் என்ற... மேலும் பார்க்க

அரசு சாா்பு நிறுவனங்களின் நஷ்டத்துக்கு ஊழியா்களே காரணம்! புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை அரசு சாா்பு நிறுவனங்கள் லாபத்தில் இயங்கிய நிலையில், ஊழியா்களின் அலட்சியத்தால் அவை நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி குருமாம்பேட்டிலுள்ள கூட்ட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனம் மீது வெடிகுண்டு வீச்சு: சிறாா்கள் உள்பட 3 போ் மீது வழக்கு

புதுச்சேரி அருகே தனியாா் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தின் மீது வியாழக்கிழமை மாலை வெடிகுண்டு வீசியதாக 2 சிறாா்கள் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்... மேலும் பார்க்க