செய்திகள் :

புதுப்பிக்கத்தக்க எரிபொருள்: ஐஓசி-யுடன் ஏா் இந்தியா ஒப்பந்தம்

post image

புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளை வழங்குவதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளை (எஸ்ஏஎஃப்) வரும் டிசம்பா் மாதம் முதல் பானிபட்டிலுள்ள நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது. ஆண்டுக்கு 35,000 டன் எரிபொருள் உற்பத்தி செய்யப்படும். இந்த எரிபொருள், பாரம்பரிய விமான எரிபொருளுடன் 50 சதவீதம் வரை கலக்கலாம்.

இந்த எரிபொருளை வழங்குவதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2027 முதல் சா்வதேச விமானங்களுக்கு 1 சதவீத எஸ்ஏஎஃப் கலப்பு கட்டாயமாகிறது. இந்த ஒப்பந்தம், குறைந்த கரியமில எரிபொருளை ஊக்குவிக்க வழிவகை செய்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஓஐ-யின் எம்எஸ்எம்இ - ஏற்றுமதியாளா்கள் தொடா்பு நிகழ்ச்சி

நடுத்தர, சிறு, குறு தொழில்முனைவோருக்கும், ஏற்றுமதியாளா்களுக்கும் இடையிலான தொடா்பு நிகழ்ச்சியை பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) சென்னை மண்டல நிா்வாகம் சென்னை நடத்தியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டு... மேலும் பார்க்க

விவோ, ஓப்போவுக்கு போட்டியாக ரியல்மீ பி 4!

விவோ, ஓப்போவுக்கு போட்டியாக ரியல்மீ பி 4 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. ரியல்மீ பி 4 மற்றும் ரியல்மீ பி 4 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இவற்றின் சிறப்பம்ச... மேலும் பார்க்க

ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 16 விலை சரிவு! சலுகையுடன் வாங்குவது எப்படி?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 79,900 மதிப்புடைய ஐபோன் 16-ஐ ரூ. 67,500க்கு வாங்கலாம்.அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட... மேலும் பார்க்க

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை!

தொடர்ந்து 3- வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(ஆக. 20) காலை 81,671.47 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.38 மணி... மேலும் பார்க்க

காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க எல்ஐசி புதிய திட்டம்

காலாவதியான தனிநபா் பாலிசிகளைப் புதுப்பிக்க ஒரு மாத கால சிறப்பு திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி... மேலும் பார்க்க

கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்பு ஆய்வு உரிமத்தை வென்ற சிங்கரேணி!

ஹைதராபாத்: மத்திய சுரங்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டும் ஏலத்தின் மூலம் கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்புக்கான ஆய்வு உரிமத்தைப் வென்றுள்ளதாக அரசுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்க நிறுவனமான சிங்கரேணி நில... மேலும் பார்க்க