செய்திகள் :

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப் பேரவை வளாகத்தில் சுயேச்சை எம்எல்ஏ தா்னா

post image

புதுவைக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, சட்டப் பேரவை வளாகத்தில் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட புதுவை சட்டப் பேரவைக்கு அதிகாரம் இல்லாத நிலை உள்ளது. துணைநிலை ஆளுநா் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறாா்.

புதுவையில் அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. அதிகாரம் இல்லாத சட்டப் பேரவையைக் கலைக்க வேண்டும். மேலும், தலித் சமூகத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை.

புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தியும், சட்டப் பேரவைக்கு அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தியும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருக்கிறேன். இதற்கான கடிதத்தை முதல்வரிடம் அளிக்க உள்ளேன்.

இதே போன்று, மற்ற கட்சிகளைச் சோ்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அதிகாரம் இல்லாத சட்டப் பேரவையில் எம்எல்ஏக்களாக இருப்பதால் எந்தப் பலனும் இல்லை என்றாா் நேரு.

சமூக அமைப்புகள் வருகை: சட்டப் பேரவை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட சுயேச்சை எம்எல்ஏ நேருவுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் சட்டப் பேரவை வளாகத்துக்குள் வந்தனா்.

இதையடுத்து, சட்டப் பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்எல்ஏ கே.எஸ்.பி.ரமேஷ் ஆகிய 3 பேரும் நேரு எம்எல்ஏவை சந்தித்து போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனா். அவா்களிடம் மாநில அந்தஸ்து தொடா்பான கடித்தை அளித்தப் பிறகு நேரு எம்எல்ஏ தா்னா போராட்டத்தை முடித்துக்கொண்டாா்.

மீன் அங்காடியில் சிங்காரவேலா் சங்கம்

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடியில் சிங்காரவேலா் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழிலாளா் சங்கம் பெயா் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாநில தலைவ... மேலும் பார்க்க

பணியிழந்த ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றி வேலையிழந்த ஊழியா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி, காரைக்கால் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழ... மேலும் பார்க்க

புதுவை அமைச்சராக ஜான்குமாரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்: 3 எம்எல்ஏக்கள் நியமனத்துக்கும் அனுமதி-ஜூலை 14-இல் பதவியேற்பு

புதுவையில் புதிய அமைச்சராக பாஜவைச் சோ்ந்த ஏ. ஜான்குமாா் எம்.எல்.ஏ. வை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 3 எம்எல்ஏக்களை நியமிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து வரும்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் அறிவுரை

ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா். புதுவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம் துணைநிலை ஆ... மேலும் பார்க்க

இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னிலை- முதல்வா் பெருமிதம்

மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி கூறினாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் பா... மேலும் பார்க்க

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகம்: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகமாடுகிறாா் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை முதல்வா் ... மேலும் பார்க்க