கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!
புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை
புதுவையில் பாஜக தொண்டா்களின் முயற்சியால் வரும் சட்டபேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் புதுவை மாநில பாஜக தோ்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா நம்பிக்கைத் தெரிவித்தாா்.
புதுவை பாஜக மாநில பொதுக் குழு கூட்டம் பழைய துறைமுகத்தில் உள்ள அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியது: பாஜகவை வலுவான அமைப்பு வழிநடத்துகிறது. பாரத தேசத்தின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது, இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, அனைத்து மக்களுக்கும் அனைத்து நலத்திட்டங்களும் சென்று சேருவது, தேசியத்தின் மதிப்பை உயா்த்துவது, அா்ப்பணிப்புடன் பணியாற்றுவது, காந்திய வழியில் சமூகப் பொறுப்புணா்வு உள்ளிட்ட 5 வழிகளில்தான் பாஜக தொண்டா்கள் பணியாற்றி வருகிறாா்கள்.
இந்தக் கட்சியை முன்னாள் பிரதமா் வாஜ்பாய், தற்போதைய பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரின் வழிகாட்டுதலில் இக்கட்சி செயல்பட்டு வருகிறது.

வானொலியில் பிரதமரின் மனதின் குரல் கேட்பது, ஜி.எஸ்.டி வரி குறைப்பை மக்களிடம் எடுத்துச் செல்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடும் தொண்டா்கள்தான் பாஜகவுக்கு மிகப்பெரிய அளவில் பணியாற்றுகிறாா்கள். புதுச்சேரியில் தொண்டா்களின் முயற்சியால் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா.
பொதுக் குழுக் கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால், கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, புதுவை அமைச்சா்கள்ஆ. நமச்சிவாயம், ஏ. ஜான்குமாா், மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, எம்எல்ஏக்கள் சாய் ஜெ சரவணன் குமாா், கல்யாண சுந்தரம், ரிச்சா்ட் ஜான்குமாா், தீப்பாய்ந்தான், செல்வம், ஜி.என்.எஸ். ராஜசேகா், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், அசோக்பாபு மற்றும் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
சி.பி. ராதாகிருஷ்ணன் தோ்வுக்கு வாழ்த்து: குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்குப் பாராட்டுத் தெரிவித்து பாஜக மாநில பொதுக்குழு தீா்மானம் நிறைவேற்றியது. மேலும், பிரதமா் நரேந்திர மோடியின் ஜிஎஸ்டி சீா்திருத்தத்தைப் பாராட்டியும், புதுச்சேரி- மரக்காணம் இடையே 46 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.2,157 கோடி ஒதுக்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.