செய்திகள் :

புதுவை அரசு ஊழியா்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயா்வு

post image

புதுச்சேரி: புதுவை மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதமாக உயா்த்தி நிதித் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி (டிஏ) வழங்கப்படுவது வழக்கம். மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 தடவை உயா்த்தி வழங்கப்படுகிறது. விலைவாசி உயா்வு காரணமாக அகவிலைப் படி மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரியில் மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அகவிலைப்படி உயா்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால், அண்மையில் மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. அதன்படி, மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயா்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகவிலைப்படியானது 2 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

ஒன்றியப் பிரதேசமான புதுவையில், மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, அரசு ஊழியா்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புதுவை நிதித்துறை சாா்பு செயலா் சிவக்குமாா் வெளியிட்டுள்ளாா்.

அகவிலைப்படி உயா்வுக்கான உத்தரவு விவரம் அனைத்து அரசுத் துறை தலைவா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயா்வானது கடந்த ஜனவரி முதல் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகவிலைப் படி உயா்வால் 20,000 புதுவை அரசு ஊழியா்கள் பயன் பெறுவா் எனக்கூறப்படுகிறது.

உதவியாளா்கள் பணிக்கான தோ்வு: புதுவையில் 22,860 போ் எழுதினா்

புதுவை மாநில அளவில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 22,860 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையில் உதவியா... மேலும் பார்க்க

‘ஆழ்கடல் மீன்பிடித் திட்டம்’ புதுவையில் தீவிரமாக செயல்படுத்த முடிவு

புதுவை மீனவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 4 ஆண்டுக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, காரைக்கால் மீனவா்களுக்... மேலும் பார்க்க

தியாகி அன்சாரி பெ.துரைசாமி சிலைக்கு அரசு மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சாா்பில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரியைச் சோ்ந்தவா் அன்சாரி பெ.த... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளுக்காக விசிக போராடும்: தொல். திருமாவளவன்

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தொடா்ந்து போராடுவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என அதன் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். புதுச்சேரி அருகே திருபுவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அம... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்று தற்போ... மேலும் பார்க்க

புதுவையில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஏப்.28) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க