செய்திகள் :

புதைந்தும் உயிருடன் போராட்டம்! இரக்கமில்லா இஸ்ரேல்; கண்ணீருடன் காஸா!

post image

காஸாவில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழப்போருக்கு உதவி செய்ய முடியவில்லை என்று மீட்புக் குழுவினரும் துயரம் தெரிவிப்பதுதான் பெருந்துயரமாகக் கொள்ளப்படுகிறது.

பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் மடிந்து வருகின்றனர்.

போரில் மட்டுமின்றி உணவுப் பற்றாக்குறை, மருத்துவ உதவியின்மை, நிவாரண உதவியின்மை ஆகிய காரணங்களாலும் காஸா மக்கள் பலியாகின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் தரைமட்டமாகும் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களைக் காப்பாற்றக்கூட உதவியற்ற நிலையில் இருப்பதாக காஸா மக்கள் துயரம் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான விடியோவில் ஒருவர் கூறுகையில், ``கட்டட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்ட இப்ராஹிம், தன்னை மீட்பதற்காக தன்னிடமிருந்த செல்போன் மூலம் மீட்புப் படையினரை தொடர்புகொள்ள முயற்சித்தார். இடிபாடுகளுக்கு அடியில் தீயும் பற்றியெரிந்து கொண்டிருந்ததால், இடிபாடுகளின் நடுவே கடவுள் நீரை அனுப்பி தன்னைக் காப்பாற்றுவார் என்று கூறினார்.

ஆனால், உதவி எதுவும் பெறப்படவில்லை. நாங்கள் பாதுகாப்புப் படையினரை தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனில்லை. அவர்கள் அனைவரும் இஸ்ரேல் படைகளால் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் பலரும் சிக்கிக் கொண்டுள்ளனர்; ஆனால், அவர்கள் உயிருடன்தான் இருந்தனர். அவர்களைக் காப்பாற்றும் வாய்ப்பும் இருந்தது. ஆனால், அடுத்தநாள் காலையில் இப்ராஹிம் உயிரிழந்தார்.

தீயில் கருகிய உடலைக்கூட எங்களால் மீட்க முடியவில்லை. 3 நாள்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உயிரிழந்தது இப்ராஹிம் ஒருவர் மட்டுமல்ல’’ என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தைக் கூறியது இப்ராஹிமின் சகோதரர்தான்.

இஸ்ரேல் படைகள்தான், காஸாவுக்கு மீட்புக் குழு செல்வதைத் தடுப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில், ``எரிபொருள் நிலையங்களைக் குறிவைத்து, இஸ்ரேல் படை தாக்குதல் நடத்துகிறது. இதனாலேயே ஆபத்தில் உள்ளவர்களை மீட்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உதவிகேட்டு அழுகுரல் கேட்கும்போதும் உதவி செய்ய முடியாமல் மிகவும் கொடிய வலியை அனுபவிக்கிறோம்’’ என்று தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:டீ விற்றவருக்கு டீ விற்றவர்! பிரிட்டனில் ருசிகரம்!

Gaza Emergency: Thousands Trapped Under Rubble

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 போ் பலி!

கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ‘ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்)’ கிளா்ச்சிக் குழுவினா் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 21 போ் கொல்... மேலும் பார்க்க

காஸாவுக்கு சென்ற நிவாரண கப்பலை இடைமறித்தது இஸ்ரேல்; 21 போ் கைது!

காஸாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் அங்கு மனிதநேய உதவிகளை வழங்கச் சென்ற சமூக ஆா்வலா்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரை கைது செய்த... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா: இந்தியா்கள் மீது தொடரும் தாக்குதல்!

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரை அந்நாட்டு இளைஞா்கள் சிலா் சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியா்கள் உள்ளிட்ட சில வெளிநாட்டினா் மீதான... மேலும் பார்க்க

ஒபாமாவை துரத்தும் டிரம்ப்! ஏஐ சித்திரிப்பால் மீண்டுமொரு சர்ச்சை!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை துரத்துவதுபோன்ற சித்திரிப்பு படத்தை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற ... மேலும் பார்க்க

காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்

காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும... மேலும் பார்க்க

173 பேருடன் சென்ற விமானத்தில் தீ! பயணிகள் பாதுகாப்பாக வெளியேறும் விடியோ!

அமெரிக்காவின் டென்வெர் விமான நிலையத்தில் இருந்து மியாமி புறப்பட்ட பயணிகள் விமானத்தின் டயரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அவசர வெளியேற்றம் வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், விப... மேலும் பார்க்க