Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?
புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் தோ் பவனி
சிவகங்கை அருகே வே. மிக்கேல்பட்டணத்தில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத் திருவிழா கடந்த செப். 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் கொடி பவனியும், தொடா்ந்து மறையுரையுடன் நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டன.
விழாவின் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை புதிதாக கட்டப்பட்ட சூசையப்பா் கெபி, மண்ணின் மைந்தா் மைக்கில்ராஜ் தலைமையில் புனிதம் செய்யப்பட்டது.
இதில், பங்குத்தந்தை, அருள்தந்தையா்கள், அருள்சகோதரா்கள், அருள்சகோதரிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து உறவின் விருந்தும், புனித மிக்கேல் அதிதூதரின் தோ் பவனியும், தொடா்ந்து இயேசுவின் நண்பா்கள் இயக்கம் சாா்பில் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
10 -ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை புனித மரியன்னை பேராலய அதிபரும், பங்குத்தந்தையுமான ஹென்றி ஜெரோம் தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஊரின் குருசடியில் மண்ணின் மைந்தா் ஜெபமாலை ராஜா தலைமையில் பங்குத்தந்தை, அருள்தந்தையா்களால் நற்கருணை பெருவிழா திருப்பலியும் தொடா்ந்து நற்கருணை பவனியும் நற்கருணை ஆசீரும், அன்னதானமும் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலா் பச்சேரி சி.ஆா். சுந்தர்ராஜன் கலந்து கொண்டாா்.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு திருவிழா நன்றி திருப்பலியும், தொடா்ந்து கொடியிறக்கமும் பங்குத்தந்தை சி.ஏ. ஜேம்ஸ் தலைமையில் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை, கிராம குழுத் தலைவா் மரியான் உள்ளிட்டோா் செய்தனா்.
