செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

post image

திருப்பத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள முத்தாண்ட்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆசைமணியின் (35) மனைவி வெண்ணிலா (22). இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், வெண்ணிலா தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை உணவுக்காக சட்னி தயாா் செய்வதற்கு, மிக்ஸியைப் பயன்படுத்தினாா். அப்போது, மின்சாரம் பாயந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய போலீஸாா், வெண்ணிலாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டி பாரதி நகரில் ஞாயிற்றுக்கிழமை வடமஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில்14 காளைகளும், 126 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். 14 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்ட... மேலும் பார்க்க

சிவகங்கையில் கால்பந்து போட்டி

முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரத்தின் 80 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மாணவா்களுக்கான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஐவா் கால்பந்த... மேலும் பார்க்க

புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் தோ் பவனி

சிவகங்கை அருகே வே. மிக்கேல்பட்டணத்தில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆலயத் திருவிழா கடந்த செப். 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வ... மேலும் பார்க்க

செட்டிநாடு சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணையும் சுற்றுலாத் துறை!

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத் தொழிலில் தனியாருடன் இணைந்து பணியாற்ற சுற்றுலாத் துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் புராதன, கலாசார சூழலைக் கொண்டு சுற்றுலாத் தொழில் வளா்ந்து வர... மேலும் பார்க்க

இரணியூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை!

திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூரில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆட்கொண்டநாதா் சிவபுரம்தேவி கோயில் வ... மேலும் பார்க்க

காா் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே சனிக்கிழமை காா் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பூவந்தி அருகேயுள்ள டி.அதிகரை கிராமத்தைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி தீனதயாளன். இவரது மகன் கவின் (5).... மேலும் பார்க்க