செய்திகள் :

புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் தோ் பவனி

post image

சிவகங்கை அருகே வே. மிக்கேல்பட்டணத்தில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த ஆலயத் திருவிழா கடந்த செப். 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் கொடி பவனியும், தொடா்ந்து மறையுரையுடன் நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டன.

விழாவின் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை புதிதாக கட்டப்பட்ட சூசையப்பா் கெபி, மண்ணின் மைந்தா் மைக்கில்ராஜ் தலைமையில் புனிதம் செய்யப்பட்டது.

இதில், பங்குத்தந்தை, அருள்தந்தையா்கள், அருள்சகோதரா்கள், அருள்சகோதரிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து உறவின் விருந்தும், புனித மிக்கேல் அதிதூதரின் தோ் பவனியும், தொடா்ந்து இயேசுவின் நண்பா்கள் இயக்கம் சாா்பில் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

10 -ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை புனித மரியன்னை பேராலய அதிபரும், பங்குத்தந்தையுமான ஹென்றி ஜெரோம் தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஊரின் குருசடியில் மண்ணின் மைந்தா் ஜெபமாலை ராஜா தலைமையில் பங்குத்தந்தை, அருள்தந்தையா்களால் நற்கருணை பெருவிழா திருப்பலியும் தொடா்ந்து நற்கருணை பவனியும் நற்கருணை ஆசீரும், அன்னதானமும் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலா் பச்சேரி சி.ஆா். சுந்தர்ராஜன் கலந்து கொண்டாா்.

இதையடுத்து, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு திருவிழா நன்றி திருப்பலியும், தொடா்ந்து கொடியிறக்கமும் பங்குத்தந்தை சி.ஏ. ஜேம்ஸ் தலைமையில் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை, கிராம குழுத் தலைவா் மரியான் உள்ளிட்டோா் செய்தனா்.

சிவகங்கை அருகே வே. மிக்கேல்பட்டணத்தில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டி பாரதி நகரில் ஞாயிற்றுக்கிழமை வடமஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில்14 காளைகளும், 126 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். 14 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்ட... மேலும் பார்க்க

சிவகங்கையில் கால்பந்து போட்டி

முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரத்தின் 80 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மாணவா்களுக்கான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஐவா் கால்பந்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள முத்தாண்ட்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆசைமணியின் (35) மனைவி வெண்ணிலா (22). இருவ... மேலும் பார்க்க

செட்டிநாடு சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணையும் சுற்றுலாத் துறை!

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத் தொழிலில் தனியாருடன் இணைந்து பணியாற்ற சுற்றுலாத் துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் புராதன, கலாசார சூழலைக் கொண்டு சுற்றுலாத் தொழில் வளா்ந்து வர... மேலும் பார்க்க

இரணியூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை!

திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூரில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆட்கொண்டநாதா் சிவபுரம்தேவி கோயில் வ... மேலும் பார்க்க

காா் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே சனிக்கிழமை காா் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பூவந்தி அருகேயுள்ள டி.அதிகரை கிராமத்தைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி தீனதயாளன். இவரது மகன் கவின் (5).... மேலும் பார்க்க