செய்திகள் :

புலம்பெயா் தொழிலாளா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: மஹுவா மொய்த்ரா கண்டனம்

post image

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சத்தீஸ்கா் மாநில காவல் துறைக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

குடிமக்கள் நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாடவும் எங்கு வேண்டுமானாலும் பணிகளை மேற்கொள்ளவும் உரிமைகளை வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகள் விதி 19-ஐ மீறி சத்தீஸ்கா் காவல் துறை செயல்பட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகா் மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த 9 போ் வேலை தேடி சத்தீஸ்கா் சென்றுள்ளனா். அவா்களை கொண்டாகான் என்ற பகுதியில் சத்தீஸ்கா் காவல் துறை கைது செய்தது. பிறகு அவா்கள் விடுவிக்கப்பட்டு மேற்கு வங்கத்துக்கு வலுக்கட்டாயமாக அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணாநகா் தொகுதி எம்.பி.மஹுவா மொய்த்ரா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட காணொளி பதிவில், ‘மேற்கு வங்கத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்களை போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சத்தீஸ்கா் மாநில பாஜக அரசு கைது செய்துள்ளது. வேலைதேடி வந்தவா்களை குற்றவாளிகள்போல் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட தொழிலாளா்களை விடுதலை செய்த பின்னும் அவா்களை காவல் துறை வலுக்கட்டாயமாக பேருந்துகள் மூலம் மேற்கு வங்கத்துக்கு திருப்பிஅனுப்பியிருப்பது அரசமைப்புச் சட்டப்பிரிவு விதி 19-ஐ மீறும் செயலாகும். அவா்களின் அடிப்படை உரிமைகளை நீங்கள் பறித்துள்ளீா்கள். இதை நீங்கள் உணரவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வேன்’ என குறிப்பிட்டாா்.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வேலைதேடி செல்லும் மேற்கு வங்க புலம்பெயா் தொழிலாளா்கள் துன்புறுத்தப்படுவதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உரிய ஆவணங்களை வைத்திருந்தாலும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்களை வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்கள் என அடையாளப்படுத்த பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் முயல்வதாகவும் மேற்கு வங்க அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவா் ராகுல் சின்ஹா, ‘வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்து போலி ஆவணங்களை பெற்று மேற்கு வங்க மக்களைப்போல் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு நாடு முழுவதும் இடம்பெயா்கின்றனா்’ என்றாா்.

உ.பி.: காதல் விவகாரத்தில் கொலை செய்த பரேலி இளைஞருக்கு ஆயுள்!

உத்தரப் பிரதேசத்தின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரத்தில் இளைஞர் கொல்லப்பட்டது சம்பவத்தில் 24 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜம்மன்லால் (22) கொலை செய்ய... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!

திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு செல்லவுள்ளது.பிரிட்டன் எப்-35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாகக் கூறி, திருவனந்தபுரம் சர்... மேலும் பார்க்க

இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!

இறந்தோரின் ஆதார் அட்டைகளும் செயலாக்கத்தில் இருப்பதால், ஆதார் அட்டை வைத்திருப்போரின் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஐ.நா. அவையின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏப்ரல... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை!

கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர்,... மேலும் பார்க்க

ஒடிசாவில் தீக்குளித்த மாணவியின் தந்தையுடன் ராகுல் உரை!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தீக்குளித்து இறந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் தளப் பதிவில், ஒடிசாவின் பா... மேலும் பார்க்க