புலியை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா்
ஓவேலி சேரன் நகா் பகுதியில் மாடுகளைத் தாக்கிக் கொன்ற புலியின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், ஓவேலி சேரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசீலன். இவா் வளா்த்து வந்த இரண்டு மாடுகளை புலி ஞாயிற்றுக்கிழமை தாக்கிக் கொன்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, வனச் சரக அலுவலா் சுரேஷ் தலைமையிலான வனத் துறையினா் சம்பவம் நிகழ்ந்த இடம், சுற்றுவட்டாரப் பகுதிகளை ட்ரேன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனா்.