திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!
புழல் சிறைக்குள் வீசப்பட்ட போதைப் பொருள்கள்: போலீஸாா் விசாரணை
புழல் சிறை வளாகத்துக்குள் வீசப்பட்ட பந்து வடிவிலான பொருளில் இருந்த போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.
புழல் சிறையில் வளாக சுற்றுச்சுவா் அருகே சனிக்கிழமை இரவு பந்து வடிவிலான பொருள் கிடந்தது.
சிறை வளாகத்தில் ரோந்து பணியில் இருந்த காவலா்கள் அதை ஆய்வு செய்தபோது, 10 கிராம் கஞ்சா, 16 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.