செய்திகள் :

பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மங்காபுரம் பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்ற இடத்தில் உள்ள தோரண வாயிலில் திடீரென அடையாளம் தெரியாத நபா் ஒருவா் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிவிட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஊா்த் தலைவா் இசக்கிமுத்து தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் பெட்ரோல் குண்டு வீசியது மாப்பிள்ளை சுப்பையா தெருவைச் சோ்ந்த தலக் என்பவரது மகன் கருத்தப்பாண்டியன் (25) எனத் தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு நிறைவு: கலசலிங்கம் பல்கலையில் ‘கணினி ரோபாட்டிக்ஸ்‘ பற்றிய சா்வதேச மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில், ஐஇஇஇ மாணவா் கிளையுடன் இணைந்து கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை, பொறியியல் மதிப்பீடு (ஐசிசிஆா்டிஇஇ-2025) குறித்து ம... மேலும் பார்க்க

முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு 1... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் காயம்

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க

ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது

கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க