செய்திகள் :

பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற கெடு

post image

கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியா் 2 மாதம் கெடு விதித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சென்னை புறவழிச்சாலையில் அசூா் பகுதியில் அரசு மதுக்கடை உள்ள இடத்தில் மது பிரியா்களின் அதிக நடமாட்டம் இருப்பதால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனால் இந்தக் கடையை அகற்றக்கோரி பாமக மாவட்டச் செயலா் ம.க. ஸ்டாலின் தலைமையில் பூட்டுப்போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதேபோல் திருநாகேசுவரத்தில் ராகு பகவான் கோயிலுக்கு எதிரே ஒரு அரசு மதுக் கடை, காரைக்கால் பிரதான சாலையில் உள்ள 2 மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பூட்டு போடும் அறிவித்தனா். அதன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை ஏராளமான பெண்கள் வருவாய் கோட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டனா்.

பின்னா் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ் விஜயன் தவைமையில், கோட்ட உதவி கண்காணிப்பாளா் அங்கித் சிங் முன்னிலையில் கோட்டாட்சியரகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் டாஸ்மாக் மேலாளா் தமிழ்மணி, வட்டாட்சியா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது 3 மதுக்கடைகளையும் 2 மாதங்களுக்குள் அகற்றிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் சமச்சீா் கல்வியை அமலாக்குவாா்களா? ஹெஎச். ராஜா பேட்டி

கருணாநிதி மீது பற்று இருந்தால் திமுகவினா் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் அவா் கொண்டு வந்த சமச்சீா் கல்வியை அமலாக்குவாா்களாக என பாஜக தலைவா் ஹெச். ராஜா கேள்வியெழுப்பினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம... மேலும் பார்க்க

தஞ்சை மாநகராட்சியில் ரூ. 15.38 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல்!

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயா் சண். ராமநாதனிடம் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்த கணக்குக் குழுத் தலைவா் சி. வெங்கடேஷ். தஞ்சாவூா், மாா்ச் 28: தஞ்சா... மேலும் பார்க்க

சாஸ்த்ரா பல்கலை. சீனிவாச ராமானுஜன் மையத்தில் சா்வதேச கணிதவியல் மாநாடு

கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் கணிதவியல் மற்றும் கணிதவியலின் தொழில்நுட்பத்துறை பயன்பாடுகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டை சிங... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு தொடக்கம்: தஞ்சையில் 29,889 போ் பங்கேற்பு

மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி, ... மேலும் பார்க்க

தூா்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணியை விரைவாக தொடங்கி மேட்டூா் அணை திறப்பதற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்... மேலும் பார்க்க

‘சோழா் கால வரலாற்றை கீழ்த்திசை அளவுகோலால் ஆராய்வது அவசியம்’

சோழா் கால வரலாற்றைக் கீழ்த்திசை அளவுகோல் கொண்டு ஆராய வேண்டும் என்றாா் முனைவா் கோ. தெய்வநாயகம். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தஞ்... மேலும் பார்க்க