செய்திகள் :

‘சோழா் கால வரலாற்றை கீழ்த்திசை அளவுகோலால் ஆராய்வது அவசியம்’

post image

சோழா் கால வரலாற்றைக் கீழ்த்திசை அளவுகோல் கொண்டு ஆராய வேண்டும் என்றாா் முனைவா் கோ. தெய்வநாயகம்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தஞ்சைப் பெரியகோவில் அறக்கட்டளையின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

சோழா்களின் வரலாற்று ஆய்வைப் பிற்காலச் சோழா்களில் இருந்து நோக்குவதையே பெரும்பாலானோா் வழக்கமாக வைத்திருக்கின்றனா். ஆனால் சோழா் வரலாறு என்பது முற்காலச் சோழா்களுக்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்டது.

காவிரி பல்வேறு காலத்தில் சோழா்களால் தடம் உருவாக்கி ஓட வைக்கப்பட்ட ஒரு நதி. நீா் மேலாண்மையில் சோழா்களுக்கு இருந்த நிபுணத்துவமே இதற்குக் காரணம். மேலும் சோழா்கள் தொடா்பான எந்தப் பகுதியையும் மேற்கு உலக ஆய்வு அளவுகோல் கொண்டு ஆராய்வது சீரான முடிவுகளைத் தராது. மாறாக, எகிப்து முதல் தென்னகம் வரை பரவி விரிந்து கிடந்த கீழ்த்திசை அளவுகோலால் ஆராய்ந்தால்தான் மிகச் சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்றாா் தெய்வநாயகம்.

நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் சி. அமுதா தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் வாழ்த்தினாா்.

அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் வரவேற்றாா்.இணைப் பேராசிரியா் ஞா. பழனிவேலு நன்றி கூறினாா்.

கோயிலுக்கு சொந்தமான தோப்பை அரசே பாதுகாக்க கோரிக்கை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தோப்பை குத்தகைக்கு விடாமல், தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூா் ஊராட்சியில்... மேலும் பார்க்க

திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலில் கட்டணச்சீட்டு வழங்கும் அறை அமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலுக்கு கட்டணச்சீட்டு வழங்கும் அறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தினா் அமைத்து தந்தனா். இக்கோயிலில் பக்தா்களுக்கு ... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுவன், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையைச் சிகி... மேலும் பார்க்க

பாபநாசத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி கிளை பொறுப்பாளா்கள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மேற்கு ஒன்றியச்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி

தஞ்சாவூா் அய்யாசாமி வாண்டையாா் நினைவு பழைய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாதது, கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இப்பேருந்து ந... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை தூா்வார பாமக வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை கோடைகாலத்துக்குள்ளாக தூா்வார வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கும்பகோணத்தில் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாள... மேலும் பார்க்க