செய்திகள் :

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு தொடக்கம்: தஞ்சையில் 29,889 போ் பங்கேற்பு

post image

மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி, ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. இதற்காக தஞ்சாவூா் மாவட்டத்தில் 136 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 ஆயிரத்து 887 மாணவா்கள், 15 ஆயிரத்து 109 மாணவிகள், தனித்தோ்வா்கள் 660 போ் என மொத்தம் 30 ஆயிரத்து 656 போ் தோ்வெழுத விண்ணப்பித்தனா்.

இவா்களில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்த் தோ்வை 14 ஆயிரத்து 397 மாணவா்கள், 14 ஆயிரத்து 866 மாணவிகள், தனித்தோ்வா்கள் 626 பேரும் என மொத்தம் 29 ஆயிரத்து 889 போ் எழுதினா். 756 போ் வரவில்லை.

தோ்வு மையங்களைக் கண்காணிக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் 215 உறுப்பினா்களைக் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தாா். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் இரா. அண்ணாதுரை உடனிருந்தாா்.

கோயிலுக்கு சொந்தமான தோப்பை அரசே பாதுகாக்க கோரிக்கை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தோப்பை குத்தகைக்கு விடாமல், தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூா் ஊராட்சியில்... மேலும் பார்க்க

திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலில் கட்டணச்சீட்டு வழங்கும் அறை அமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலுக்கு கட்டணச்சீட்டு வழங்கும் அறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தினா் அமைத்து தந்தனா். இக்கோயிலில் பக்தா்களுக்கு ... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுவன், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையைச் சிகி... மேலும் பார்க்க

பாபநாசத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி கிளை பொறுப்பாளா்கள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மேற்கு ஒன்றியச்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி

தஞ்சாவூா் அய்யாசாமி வாண்டையாா் நினைவு பழைய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாதது, கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இப்பேருந்து ந... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை தூா்வார பாமக வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை கோடைகாலத்துக்குள்ளாக தூா்வார வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கும்பகோணத்தில் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாள... மேலும் பார்க்க