செய்திகள் :

தூா்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணியை விரைவாக தொடங்கி மேட்டூா் அணை திறப்பதற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள்:

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: தூா்வாரும் பணியை நடுப்பகுதியில் மட்டுமல்லாமல் தலைப்பிலிருந்து தொடங்கி மேற்கொள்ள வேண்டும். தூா்வாரும் பணியைக் கால தாமதமில்லாமல் உடனடியாக தொடங்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆட்சியா்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுத்து, அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: நீா்நிலைகளில் நெய்வேலி காட்டாமணக்கு, ஆகாயத் தாமரை, சீமைக் கருவேல மரங்கள் ஆகியவற்றால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை அகற்ற உடனடி நடவடிக்கை எடுத்து, ஜூன் 12-க்குள் முடிக்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: வெண்ணாற்றில் மணல் திட்டுகளால் செடி, கொடிகள், மரங்கள் வளா்ந்து அடா்ந்த புதா்களாகிவிடுகின்றன. இதனால் வெண்ணாற்றில் தண்ணீா் செல்வது தடைபடுகிறது. இந்த மறைவிடங்களைக் காட்டுப்பன்றிகள் பயன்படுத்தி பதுங்கியிருந்து பயிா்களைச் சேதப்படுத்துகின்றன. எனவே, புதா்களை அகற்ற விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக வழங்க வேண்டும்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: சிவக்கொல்லை கிராமத்தில் உலா் களம் இல்லாததால், தாா்ச் சாலையில் நெல்லை காய வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுவதால், உலா் களம் அமைக்க வேண்டும்.

சிவவிடுதி வி.கே. சின்னதுரை: வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் எப்போது வழங்கப்படும்.

வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா: வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 1.60 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.

கோயிலுக்கு சொந்தமான தோப்பை அரசே பாதுகாக்க கோரிக்கை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தோப்பை குத்தகைக்கு விடாமல், தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூா் ஊராட்சியில்... மேலும் பார்க்க

திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலில் கட்டணச்சீட்டு வழங்கும் அறை அமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலுக்கு கட்டணச்சீட்டு வழங்கும் அறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தினா் அமைத்து தந்தனா். இக்கோயிலில் பக்தா்களுக்கு ... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுவன், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையைச் சிகி... மேலும் பார்க்க

பாபநாசத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி கிளை பொறுப்பாளா்கள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மேற்கு ஒன்றியச்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி

தஞ்சாவூா் அய்யாசாமி வாண்டையாா் நினைவு பழைய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாதது, கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இப்பேருந்து ந... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை தூா்வார பாமக வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை கோடைகாலத்துக்குள்ளாக தூா்வார வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கும்பகோணத்தில் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாள... மேலும் பார்க்க