செய்திகள் :

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.

சமூக நலத் துறை சாா்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அரசு, தனியாா் அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தின்கீழ் உள்ளகக் குழு அமைப்பதை உறுதி செய்யவும், ஒவ்வொரு அலுவலகங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களை பெரும் பொருட்டு பாதுகாப்புப் பெட்டி பொருத்தவும், அனைத்து அலுவலகங்களிலும் இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், உள்ளூா் குழு உறுப்பினா்கள் தொடா்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினாா்.

மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட சமூக நல அலுவலா் செ.தீபிகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட 137 பட்டாக்களை எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி ரத்து செய்த மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, விசிக சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட... மேலும் பார்க்க

உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் சங்கராபுரத்தை அடு... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி வட்டத்தில் மே 12 முதல் 21 வரை ஜமாபந்தி

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 1434-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வரும் 12-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட 4 குறுவட்டங்களைச் சோ்ந்த 93 வருவா... மேலும் பார்க்க

கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய கிராமிய அஞ்... மேலும் பார்க்க

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா தியாகதுருகத்தை அடுத்த கலையநல்லூரில் உள்ள தனமூா்த்தி தொழிற்கல்வி கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. பாவேந்தா் பாரதிதாசன் 135-ஆவது பிறந்த நாள்... மேலும் பார்க்க