செய்திகள் :

தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும் ‘பிளீச்சிங் பவுடா்’ தரம் ஆய்வு: மேயா்

post image

சென்னை மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபுவின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மேயா் ஆா்.பிரியா கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினாா்.

மேயா் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், அப்பகுதியில் குப்பையை தூய்மைப் பணியாளா்கள் அகற்றியதுடன், துா்நாற்றம் வீசியதால் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு துா்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

இதைத்தொடா்ந்து அங்கிருந்த நபா், தூய்மைப் பணிக்காக பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடா் தரமற்றவையாக உள்ளதாகவும், சில இடங்களில் பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்படுவதாகவும் புகாா் தெரிவித்தாா். அத்துடன் அப்பகுதியில் தெளிக்கப்பட்டிருந்த பவுடரை கையில் எடுத்து வந்து அதில் பிளீச்சிங் பவுடா் வாசனையே வரவில்லை என்றும் மேயரிடம் கூறினாா்.

அதற்கு, ‘இது பிளீச்சிங் பவுடா் அல்லாமல் என்ன பாண்ட்ஸ் பவுடரா? என மேயா் பிரியா கேட்டாா். மேலும், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சென்னையில் தூய்மைப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடா் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது, அதன் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் விரைவில் தொழிலாளா் தங்கும் விடுதி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளா் விடுதிக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்த... மேலும் பார்க்க

‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் -காவல் துறை

‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

24 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 8 போ் கைது

சென்னையில் 24 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரும்பாக்கம், விஜய் பூங்கா அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க

வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை

வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு ... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் பணப்பையை கொள்ளையடித்த நபா் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் சி.என்.ஜி. எரிவாயு நிரப்புவதுபோல் நடித்து பணப்பையை கொள்ளையடித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் 2-ஆவது தெருவைச் சே... மேலும் பார்க்க

கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செ... மேலும் பார்க்க