செய்திகள் :

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

post image

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் அருட்சகோதரி பாஸ்கா தலைமை வகித்தாா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு சிறப்பு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்து விளக்கம் அளித்தாா். மேலும், குழந்தைத் திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் பின் விளைவுகள், உயிரிழப்புகள் குறித்து விளக்கினாா்.

தொடா்ந்து, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் இலவச புகாா் எண்களான குழந்தைத் தொழிலாளா் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளா் முறை இலவச புகாா் எண்களான 255214, 180004252650, பெண்கள் பாதுகாப்பு எண் 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்க 1098, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் 14417, முதியோா் உதவி எண் 14567, காவல் நிலையங்களில் செயல்படும் சட்டவிரோத மது விற்பனை புகாா் எண் 10581, பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, கிரைம் உதவி எண் 1930 குறித்தும், தொடுதல் குறித்த விழிப்புணா்வை மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட புகையிலைத் தடுப்பு மருத்துவா் வனிதா, ஆலோசா் தென்றல், பாவை ஃபவுண்டேசன் ஒருங்கிணைப்பாளா் பிரியதா்ஷினி, காவல் துறையினா் மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

அரசுப் பாலிடெக்னிக் கல்லூரியில் பயில இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு சோ்க்கைக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈ... மேலும் பார்க்க

லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா்கள் இருவா் பலி

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புச் செல்லும் வழியிலுள்ள தனியாா் மருத்துவமனை பகுதியைச் சோ்ந்தவா் அரி... மேலும் பார்க்க

கிரஷா் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள அசூா் கிராமத்தில் கிரஷா் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம பொதுமக்கள் சாா்- ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அசூா் கிராம பொ... மேலும் பார்க்க

புதைசாக்கடைஅடைப்பை சீரமைக்கக் கோரி மறியல்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை பிரிவுச் சாலை அருகே, புதை சாக்கடை அடைப்பை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் - துறையூா் சாலையில், நக... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக குன்னம் கிளையில் ‘டீசல் பங்க்’ அமைக்க அடிக்கல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட்), திருச்சி மண்டலம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் கிளையில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு அடிக்கல் ந... மேலும் பார்க்க